பணக்கார மேட்டுக்குடியி னரின் கையில் உலகப் பொ ருளாதாரம் சிக்கியுள்ளதாக ‘ஆக்ஸ்பாம்’ (Oxfam) அமைப்பு தனது புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் செல்வம் 2 டிரில்லியன் டாலர்கள் அதி கரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது
கோடீஸ்வரர்களின் சொத்து வளர்ச்சி
2024-ஆம் ஆண்டில் உலகக் கோடீஸ்வரர்களின் மொத்த செல்வம் 13 டிரில்லியன் டாலர்க ளில் இருந்து 15 டிரில்லியன் டாலர்க ளாக உயர்ந்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிக வளர்ச்சியாகும். தினமும் சராசரியாக 5.7 பில்லி யன் டாலர்கள் அளவிற்கு இவர்க ளின் சொத்து மதிப்பு அதிகரித்துள் ளது. ஒவ்வொரு வாரமும் சராச ரியாக நான்கு புதிய கோடீஸ்வ ரர்கள் உருவாகியுள்ளனர்.
உலகின் முன்னணி பணக்காரர்கள்
உலகின் முதன்மைப் பணக்கா ரர்களாக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் - 449 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், அமே சான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசோஸ் - 245 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தி லும், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் - 217 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வறுமைக்கோட்டில் 44 சதவிகித மக்கள்
உலக மக்கள்தொகையில் 44 சதவிகிதம் பேர், உலக வங்கி நிர்ண யித்த வறுமைக் கோடு அளவுக்கும் (தினசரி 6.85 டாலர் மட்டும் சம்பா திப்பவர்கள்) கீழே வாழ்கின்றனர். அதேநேரத்தில், உலகின் மொத்த செல்வத்தில் 45 சதவிகிதத்தை மேல்தட்டிலுள்ள ஒரு சதவிகித மக்களே வைத்திருக்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரண மாக கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள் ளனர்.
பரம்பரை செல்வந்தர்கள்
2023-ஆம் ஆண்டில் முதன் முறையாக, தொழில்முனைவு மூலம் பணக்காரர்கள் ஆவதை விட வாரிசு உரிமை மூலம் அதிக கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ள னர். 30 வயதுக்கு உட்பட்ட அனை த்து கோடீஸ்வரர்களும் பரம்பரை செல்வந்தர்கள் என்பது குறிப்பி டத்தக்கது. அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து (315,000 ஆண்டு கள்) தினமும் 1,000 டாலர் சேமித்தி ருந்தாலும் கூட, தற்போதைய பத்து பெரும் கோடீஸ்வரர்களின் செல்வத்தை எட்ட முடியாது என்பது கவலைக்குரிய விஷயம். மேலும், முதல் பத்து கோடீஸ்வ ரர்கள் தங்கள் செல்வத்தில் 99 சதவிகிதத்தை இழந்தாலும் கூட, அவர்கள் கோடீஸ்வரர்களாகவே இருப்பார்கள்.
பெரு நிறுவனங்களின் ஏகபோகம்
ஜெப் பெசோஸின் அமேசான் நிறுவனம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளின் ஆன்லைன் வர்த்த கத்தில் 70 சதவிகிதத்திற்கும் அதிக மான பங்கைக் கொண்டுள் ளது. இதுபோன்ற ஏகபோக நடவ டிக்கைகள் அந்த நாடுகளின் சிறு வணிகங்களை அழித்து, தொழி லாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்றன.
அரசியல் செல்வாக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பதவி யேற்பு விழாவில், உலகின் பத்து பெரும் பணக்காரர்களில் 5 பேர் கலந்து கொண்டனர். மஸ்க், பெசோஸ், ஜூக்கர்பெர்க், பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் கூகுள் நிறுவனரான செர் கெய் பிரின் ஆகியோர் இதில் அடங்குவர். எச்சரிக்கும் ஆக்ஸ்பாம் நிர்வாகி இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டி, ‘உலகப் பொருளாதா ரத்தில் சிலரின் ஆதிக்கம் கற்ப னைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளது’, என குறிப்பிடும் ‘ஆக்ஸ்பாம்’ சர்வதேச நிர்வாக இயக்குநர் அமிதாப் பெஹார், ‘கோடீஸ்வரர்களை தடுக்கத் தவறி யதால், விரைவில் டிரில்லியனர்கள் உருவாக வாய்ப்புள்ளது’ என்று எச்சரிக்கிறார். ‘கோடீஸ்வரர்களின் செல்வ வளர்ச்சி மட்டுமல்லாமல், அவர்களின் அதிகாரமும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது’, என தெரிவிக்கிறார்.
அதிகார குவிப்பின் விளைவுகள்
உலகப் பெரும்பணக்காரர்கள் வசமுள்ள இந்த அதிகாரக் குவிப்பு, பொருளாதாரக் கொள்கை களை தங்களுக்கு சாதகமாக மாற்றுதல்; சமூக நலத்திட்டங்க ளை பாதிக்கும் வகையில் ஆட்சி யாளர்களை முடிவுகளை எடுக்க வைத்தல்; ஊடகங்களை கட்டுப் படுத்தி தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடுதல்; அரசி யல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்து செல்வாக்கு செலுத்து தல் என்ற விளைவுகளை ஏற்படுத்து கின்றன.
பைடனும் கூட எச்சரிக்கிறார்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கூட, பதவி விலகும் முன்பு ஆற்றிய உரையில், “அமெ ரிக்காவில் தீவிர செல்வம், அதி காரம் மற்றும் செல்வாக்கு கொண்ட சிறுபான்மையினரின் ஆதிக்கம் உருவாகி வருகிறது” என எச்ச ரித்துள்ளார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் தான் கோடீஸ்வ ரர்களின் செல்வம் பெருமள வில் அதிகரித்துள்ளது குறிப்பி டத்தக்கது. தேவையான தீர்வுகள் எனவே, தற்போது தேவை யான தீர்வுகள் என்னவென்றால், ‘1. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மீது உரிய வரி விதிப்பு; 2. தொழிலா ளர்களின் உரிமைகளை பாது காக்கும் சட்டங்களை வலுப்படுத்து தல்; 3. ஏகபோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்களை கொண்டு வருதல்; 4. சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல்; 5. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல்’ ஆகி யவை தான் என்று ‘ஆக்ஸ்பாம்’ குறிப்பிடுகிறது. ஆக்ஸ்பாம் அமைப்பின் இந்த அறிக்கை, உலகளாவிய பொருளா தார அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் தேவை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. கோடீஸ்வரர்களின் செல்வமும் அதிகாரமும் கட்டுக்கடங்காமல் வளர்ந்து வரும் நிலையில், சாமா னிய மக்களின் வாழ்வாதாரம் கடு மையாக பாதிக்கப்படுகிறது. இந்த அபாயகரமான போக்கை மாற்ற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசிய மாகிறது. அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கும் வகை யில் பொருளாதார கொள்கை களை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது! என்கிறது. இந்த அறிக்கை சுவிட்சர்லாந் தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு முன்ன தாக வெளியிடப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் உலகின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த பிரச் சனை குறித்து விவாதிக்க உள்ளனர். ஆனால், இதுவரை காலமும் இது போன்ற கூட்டங்க ளில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடய மாகும்.
உலகின் செல்வத்தில் 45 சதவிகிதம் வெறும் 1 சதவிகிதம் பேரின் கைகளில்...
உலக மக்களில் 44 சதவிகிதம் பேர் தினசரி 6.85 டாலருக்கும் குறை
வான வருமானத்தில் வாழ்கின்றனர்.
K உலக செல்வத்தில் 45 சதவிகிதம், மக்கள் தொகையில் ஒரு சத
விகிதமே உள்ள மேல்தட்டு மக்களிடம் குவிந்துள்ளது.
K மனித குலம் தோன்றிய காலம் முதல் (315,000 ஆண்டுகள்) தினமும் 1,000 டாலர் சேமித்திருந்தாலும், தற்போதைய பத்து பெரும் கோடீஸ்வரர்களின் செல்வத்தை எட்ட முடியாது.
K முதல் பத்து கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தில் 99 சதவிகிதத்தை இழந்தாலும் கூட, அவர்கள் கோடீஸ்வரர்களாகவே இருப்பார்கள்.
2024-ஆண்டில் அதிகரித்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு
K2024-இல் கோடீஸ்வரர்களின் மொத்த செல்வம் 2 டிரில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.
K தினசரி செல்வ வளர்ச்சி 5.7 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது.
K ஒரு வாரத்திற்கு நான்கு புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர்.
K முதல் பத்து கோடீஸ்வரர்களின் தினசரி வருமானம் தலா 100 மில்லியன் டாலர்களாகும்.
K 2023-இல் முதன்முறையாக வாரிசு உரிமை மூலம் அதிக கோடீஸ்வ
ரர்கள் உருவாகியுள்ளனர்.
K 30 வயதுக்குட்பட்ட அனைத்து கோடீஸ்வரர்களும் பரம்பரை செல்வந்தர்களாக உள்ளனர்.
K திறமை அல்ல, பரம்பரை செல்வமே கோடீஸ்வரர்களை உருவாக்குகிறது என்பதும் இதில் வெளிப்பட்டுள்ளது.