பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கேரளாவை அழித்துவிடும்
முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை
கண்ணூர் பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கேரளாவின் பிம்பத்தை அழித்து விடும் என்று அம்மாநில முதலமைச் சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டக்குழு அலுவலகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட அழிக்கோடான் நினைவு கட்டி டத்தைத் திறந்து வைத்து அவர் மேலும் பேசு கையில்,“கேரளா பொதுவாக அனைவரும் சகோ தரத்துவத்துடன் வாழும் ஒரு பூமி. மறுமலர்ச்சி இயக்கங்களின் முறையான தொடர்ச்சி இருந்த தால் இது சாத்தியமானது. அதனால்தான் கேரளா மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. சங் பரிவார் இதை சீர்குலைக்கும் வகையில் அதன் நிகழ்ச்சி நிரலை அமைத்துள்ளது. சங் பரிவார் ஓணத்தி ற்குப் பின்னால் உள்ள புராணத்தை கூட மாற்று கிறது. மாவேலிக்கு பதிலாக வாமனரை வணங்கு கிறார்கள். சபரிமலையில் புராணத்துடன் தொடர்பில்லாத ஒன்றை அறிமுகப்படுத்த அவர்கள் தயாராக உள்ளனர்.சங் பரிவார் வெறுப்பைப் பரப்ப பொய்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இன்று கேரளாவில் நிலவும் சகோத ரத்துவத்தையும் அமைதியையும் அழித்துவிடும். வாவர் ஒரு பயங்கரவாதி என்ற கருத்தை அவர்கள் புனைந்து பரப்பினர். பாஜகவுக்கு வர வேற்பு கிடைத்தால், இன்று நாம் காணும் ஐய்யப்பன் கூட மறைந்துவிடும் என்பதை இது நிரூபிக்கிறது. பாஜக தங்கள் நிகழ்ச்சி நிரலை தெளி வாக அறிவித்துள்ள சூழ்நிலையில், சமூகம் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிபிஎம் எப்போதும் சங் பரிவாரங்களுக்கு வெளிப் படையாக தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது. நாம் மட்டும்தான் அதைச் செய்ய வேண்டுமா? காங்கிரஸ் எப்போதும் சங் பரிவாரங்களுடன் சமர சம் செய்து கொள்கிறது” என அவர் குற்றம் சாட்டினார்.
