states

img

பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தேர்வுக் குழுக்களுக்கு விடப்பட்டது

திருவனந்தபுரம், டிச. 8- கேரள சட்டப்பேரவையில் புத னன்று (டிச.7) சமர்ப்பிக்கப்பட்ட பல் கலைக்கழக சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையின் தேர்வுக் குழுக் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் சார்பில், சட்ட அமைச்சர் பி.ராஜீவ் மிக முக்கியமான பல்கலை க்கழக திருத்த மசோதாவை தாக்கல்  செய்தார். இந்த மசோதா மத்திய சட்ட த்துக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சி களின் நிலைப்பாடு ஆபத்தான அரசியல் என்று அமைச்சர் கூறினார். கல்வியாளர்களை பல்கலைக் கழகங்களின் தலைவர்களாகக் கொண்டுவரும் வகையில் இந்தச் சட்டம் உள்ளது. பேரவையில் நிறை வேற்றப்பட்ட சட்டத்தை விட யுஜிசி விதிகள் மேலானவையா என்ற கேள்வி க்கு, மல்லிகா சாராபாய் கலாமண்ட லின் வேந்தராக நியமிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, தகுதியானவர்கள் வேந்தராக நியமிக்கப்படுவார்கள் என்று சட்ட அமைச்சர் உறுதியளித் தார். யுஜிசி விதிகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணையை நிராகரித்த சபாநாயகர், துணை வேந்தர்களின் தகுதி குறித்து மசோதா மீதான விவாதத்தின் போது  பரிசீலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தி னார். தேர்வுக் குழுவின் பரிசீலனை க்குப் பின், திரும்பி வரும் மசோதா 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பப்படும்.