புதுதில்லி, நவ. 28 - நாடு முழுவதும் பள்ளிகளில் சானிட் டரி நாப்கின்கள் இருப்பதை கட்டாய மாக்க கோரிய வழக்கில் ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக செயற்பாட்டாளர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் அரசிய லமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், “மாதவிடாய் சுகாதார மேலாண்மை, பெண்களின் கல்விக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காததன் காரணமாக இந்தியா வில் 23 லட்சம் பெண்கள் பள்ளிப் படிப்பினை இடைநிறுத்தம் செய்துள் ளனர். அதனால் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவி களுக்கு பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் மாணவி களுக்கு ஏற்படுத்த வேண்டும்;
அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் குடியிருப்புப் பள்ளிகளிலும் துப்புரவு பணியாளர்களுடன் தனித்தனி யாக பெண்கள் கழிப்பறை அமைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா அமர்வு முன்பு திங்களன்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வருண் தாக்கூர் ஆஜ ரானார். ஒன்றிய அரசின் சார்பில் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது, இந்த வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகள், நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவி களுக்கு இலவச நாப்கின்கள் வழங்கு வது குறித்து ஒன்றிய - மாநில அரசு கள் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும், 2023 ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.