புதுதில்லி,மார்ச் 24- ஹிஜாப் தடைக்கு எதிரான மேல் முறையீட்டை அவசர வழக் காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. மாநில பாஜக அரசும் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்துத் துவா அமைப்புகளும் பாஜக தலைவர்களும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தையும் கல்வி வளாகங்களில் தகராறும் செய்தனர். ஹிஜாப் அணிய தடை உத்தர வை எதிர்த்து இஸ்லாமிய மாண விகள் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடர்ந்த னர். முடிவில், பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும் என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள் ளது. மாணவ-மாணவிகளுக்கு வரும் 28 ஆம் தேதி தேர்வு தொட ங்க உள்ளதால் ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரி க்க வேண்டும் என்று மேல்முறை யீடு செய்துள்ள மாணவிகளின் வழக்கறிஞர்களில் ஒருவரான கமத் உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று முறையீட்டார். ஆனால், ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த பிரச்சனைக்கும் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த விவ காரத்தை உணர்வுப்பூர்வமான தாக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது.