புதுதில்லி, ஏப். 4 - சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக்கப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு கல்வியாண்டிலேயே அம லுக்கு வரும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. என்சிஇஆர்டி, இந்த அறி விப்பை வெளியிட்ட உடனேயே, தாங்களும் அதையே பின்பற்றப் போகிறோம் என்று உத்தரப் பிரதேச மாநில வாரியமும் அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் மத்தி யக் கல்வி வாரியமும், மாநிலங்கள் அளவில் மாநிலக் கல்வி வாரி யங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்திற்கான (Central Board of Secondary Education - CBSE) பாடத்திட்டங் களை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான ‘என்சிஇஆர்டி’ வகுத்தளித்து வருகிறது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என்சிஇஆர்டி-யின் மூலம் பாடத்திட்டங்களை மாற்றி யமைத்து வருகிறது. மேலும், தங்க ளின் இந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில், வரலாற்றை மோசடியாக திருத்தி வருகிறது. அந்த வகையில்தான் தற்போது, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு வரலாறு, குடிமையியல் மற்றும் இந்தி பாடத்திட்டங்களில் பல்வேறு பகுதிகளை நீக்கி என்சிஇஆர்டி அறிவித்துள்ளது. குறிப்பாக, குடி மையியல் பாடப் புத்தகத்தி லிருந்து, ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தி யாயங்களையும், அரசியல் அறி வியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந்தியாவில் அரசியல்’ புத்தகத்தின் இரண்டு அத்தி யாயங்களையும் நீக்கியுள்ளது. அதாவது - ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனிக் கட்சி ஆதிக்க த்தின் சகாப்தம்’ ஆகியவை நீக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் சோச லிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தி யாவில் காங்கிரசின் ஆட்சி போன்ற வை இந்த அத்தியாயங்களில் இடம் பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, வரலாறு பாடப் புத்தகத்திலிருந்து முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தி யாயமே, அதாவது- (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றா ண்டுகள்) இந்திய வரலாறு - பகுதி II- (‘Kings and Chronicles’ and ‘The Mughal Courts’) நீக்கப் பட்டுள்ளது. இது தவிர ஹிந்தி புத்தகத்தில் இருந்து சில பத்திகள் மற்றும் கவிதைகளும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பகுதி களிலும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் நடப்பு 2023-24 கல்வி அமர்வு முதலேயே நடைமுறைக்கு வரும் என்றும் என்சிஇஆர்டி தெரி வித்துள்ளது.
சிபிஎஸ்இ-யின் கீழ் உள்ள பள்ளிகளைத் தவிர, சில மாநில வாரியங்களும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களையே பயன் படுத்துகின்றன என்ற நிலையில், அந்த மாநில வாரியங்களும், என்சி இஆர்டி புத்தகங்களின் திருத்தப் பட்ட பதிப்பைக் கடைப்பிடிக்கும் என்று அறிவித்துள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநில பாஜக துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அளித்துள்ள பேட்டி யில், “நாங்கள் என்சிஇஆர்டி புத்தகங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் என்ன உள்ளதோ, அதையே பின்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
சீத்தாராம் யெச்சூரி கண்டனம்
என்சிஇஆர்டி பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் இருக்கும் முகலாய சாம்ராஜ்யம் குறித்த பாடங்களை நீக்குவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய தாவது, “வரலாற்றை வகுப்புவாத மாக மாற்றி எழுதும் முயற்சி தீவிரமடைகிறது. பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் இருக்கும் முகலாய சாம்ராஜ்யம் பற்றிய அத்தியாயங்களை என்சிஇஆர்டி (NCERT - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) நீக்குகிறது. இந்தியாவின் நிலங்கள் எப்போதுமே கலாச்சார சங்கமங்கள் மூலம் நாகரீக முன்னேற்றங்களின் காரணியாக இருந்து வருகின்றன” எனக் கூறியுள்ளார்.