states

img

இந்தியா - சீனா உறவு குறித்து பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும்: ப.சிதம்பரம்

புதுதில்லி, டிச.16- சீன - இந்திய ராணுவத்திற்கு இடையே தவாங்  செக்டாரில் நடந்த மோதல் குறித்த, எதிர்க்கட்சி களின் சந்தேகங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், ப.சிதம்பரம் மேலும் கூறியிருப்பதாவது: சீனாவின் புதிய அத்துமீறல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் நான் நிச்சயமாக திருப்தி அடைய வில்லை. நாளிதழ்களில் வந்ததைத் தவிர அவர்  எதுவும் கூறவில்லை. காலை 6 மணிக்கு செய்தித் தாள்களில் இருந்து கிடைத்த தகவல்களைத் தாண்டி, மதியம் 12.30 மணியளவில் ராஜ்நாத் சிங்  கூடுதலாக அளித்த தகவல் என்ன? உண்மை யில், இது முற்றிலும் ஒரு வெற்று அறிக்கை. எனவேதான், பாதுகாப்புத்துறை அமைச்சரி டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் கேட்க விரும்புகிறார்கள். ஊடுருவும் தேதி, நேரம் மற்றும் இடத்தை சீனா தேர்வு செய்வது எப்படி நடக்கும் என்ற கேள்வி எனக்கே இருக்கிறது. மேலும் இது நடப்பது முதல் முறை அல்ல.

இது 2020-இல் கல்வானில் நடந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஊடுருவலிலும் சீனா தேர்வு செய்த நேரம், இடம் மற்றும் தேதியில்தான் நடந்துள்ளது. அப்படியென்றால், இந்த கால இடைவெளியில் ஊடுருவல்களில் இருந்து சீனாவைத் தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சீனாவின் அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூற முடியாது. இதைப் பற்றி பேசவே அஞ்சும் அள வுக்கு, தீவிரப் பிரச்சனையாகத்தான் ஒன்றிய அரசு  எடுத்துக் கொள்கிறது. சீனா என்ற சொல்லைக் குறிப்பிடவே பயப்படுகிறார்கள். சீனா என்ற வார்த்தையை பிரதமர் குறிப்பிடவில்லை. சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை சந்தித்தபோது என்ன நடந்தது என்று அவர் குறிப்பிடவில்லை. அவர் பலமுறை ஜின்பிங்கை சந்தித்துள்ளார். கடைசி சந்திப்பு ஜி20 மாநாட்டில் நடந்தது. அவர் அங்கு ஜின்பிங் உடன் இருந்தார். அவர்கள் ஒரே அறையில் இருந்தனர். சீனா என்ற வார்த்தையை பிரதமர் குறிப்பிடவில்லை, மேலும் ஊடுருவல்கள் பற்றி அவர் ஜின்பிங்கிடம் என்ன சொன்னார் என்பதை அவர் விளக்கவில்லை. ஊடுருவல்கள் பற்றி அவர் ஜீ-யிடம் ஏதாவது சொன்னாரா இல்லையா? என்பதுதான் கேள்வி.  பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துவிட்ட பிறகு, விவாதத்திற்கு அனு மதி இல்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால்,  கடந்த காலங்களில் அமைச்சர் ஒருவர் மாநிலங் களவையில் அறிக்கை தாக்கல் செய்ததற்கு பிற கும் விவாதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. உதாரண மாக, பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் ‘வாக்கிற்கான பணப் பரிமாற்றம்’ பற்றி விவாதம் நடந்தது. இரண் டாவதாக, அன்னா ஹசாரே இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது, ​​மாநிலங்களவையில் ஒரு அறிக்கைக்குப் பிறகு ஏழு மணி நேரம் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் 27 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மீண்டும், அமைச்சரின் அறிக்கைக்கு பிறகு லோக்பால் குறித்து மாநிலங் களவையில் முழு விவாதம் நடந்தது. எனவே, ஒரு  அமைச்சரின் அறிக்கைக்குப் பிறகு முழு விவா தத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று எடுத்துக்காட்டுகள் உள்ளன.  இது ஒரு உணர்வுப்பூர்வமான எல்லைப் பிரச்ச னை என்பது பிரதமரின் வாதமாக உள்ளது. அவ் வாறு உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகர மான எல்லைப் பிரச்சனையாக இருந்தால், கதவுகள் மூடப்பட்ட அமர்வை (closed-door session) நடத்துங்கள். நாடாளுமன்றத்தின் கேமரா அமர்வை நடத்துங்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், எதிர்க்கட்சித் தலைவர்களை – குறைந்தபட்சம் பெரிய கட்சிகளின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களையாவது  அழைக்கலாம். இங்கே பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.