states

பாஜகவை தனிமைப்படுத்தி முறியடிப்பதே முதன்மைப் பணி

புதுதில்லி, ஏப். 30- பாஜகவைத் தனிமைப்படுத்தி நாடாளு மன்றத் தேர்தலில் வீழ்த்துவதே இந்திய மக்களின் முன்னால் உள்ள பிரதான பணி  என்றும் அதை நிறைவேற்றிட உறுதி யேற்போம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஏப்ரல் 27, 28, 29 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தலை வர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், இதுதொடர்பாக கூறியிருப்பதாவது: பாஜகவைத் தனிமைப்படுத்தி, முறி யடித்திடுவதே நாட்டின் முன்னும் மக்களின் முன்னும் உள்ள பிரதான பணி என்று மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது. இதனை நிறைவேற்றிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைத்து பணியாற்றும்.

ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களின் மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுவது, வெறுப்பு பிரச்சாரம் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள், அதானி ஊழல், மத்திய உளவு ஸ்தாபனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுதல், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட அட்டூழி யங்களை எதிர்த்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை முன்வைத்தும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சாத்தியமான அளவிற்கு ஒருங்கிணைப்பது முக்கியமாகும். இது போன்ற பிரச்சனைகள் மீது அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைத்திடவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். தேர்தல்களில் பாஜக-விற்கு எதிரான வாக்குகளை சிதறாமல் ஒருங்கிணைத்திட, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை யைக் கட்டி எழுப்பிட, தேவையான உத்திகளை உருவாக்கிட வேண்டும்.  இந்தப் பிரச்சனை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால், அந்தந்த மாநிலத்திற்கேற்றவாறு உத்திகளைக் கண்டறிந்திட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.