இ.கே.நாயனார் நகர் (கண்ணூர்), ஏப்.9- சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை முகமைகளைப் பயன்படுத்தி, காஷ்மீரில் உள்ள அர சியல் தலைவர்களின் வாயை அடைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கி றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி குற்றம் சாட்டியுள்ளார். கண்ணூரில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாட்டில் ஜம்மு - காஷ்மீர் மாநில பிரதிநிதிகளு டன் பங்கேற்றுள்ள தாரிகாமி, இது தொடர்பாக மேலும் கூறியிருப்பதா வது: “பல ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து விசா ரிக்க உமர் அப்துல்லாவுக்கு அம லாக்க இயக்குநரகம் இப்போது சம் மன் அனுப்பியுள்ளது. மத்திய புல னாய்வு அமைப்புகளின் உதவியுடன் உமர் மட்டுமின்றி, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரையும் பாஜக வேட்டையாடுகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அமைதி ஏற்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் யுஏபிஏ மற் றும் விஎஸ்ஏ போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் மக்களுக்கு எதிராக பரவ லாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக் களுடன் தொடர்புடைய தலைவர் களை கண்டுபிடித்து இழிவுபடுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. காஷ்மீ ரில் பெரிய அளவில் முதலீடு வரும் என தெரிவித்தனர். ஆனால், எதுவும் வரவில்லை. வேலை வாய்ப்பு தரு வதாக கூறினர். பெரும்பாலான மக்க ளுக்கு வேலை கிடைக்கவில்லை. காஷ்மீரி பண்டிட்டுகள் கடுமை யான துன்புறுத்தலை எதிர்கொண்ட னர். ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களை மீட்டு அழைத்து வரவோ, நிவாரண நட வடிக்கை எடுக்கவோ ஒன்றிய அரசு முயற்சிக்கவில்லை. மாறாக அவர் களது கண்ணீரை, தேர்தலை முன் னிட்டு விற்க முயல்கின்றனர். இவ்வாறு தாரிகாமி கூறினார்.