states

img

இந்தியா: ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3007 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3007 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,007-ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 876 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 465 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் தொற்றில் பாதிக்கப்பட்ட  சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1199 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.