புதுதில்லி, மார்ச் 10 - இந்திய உணவு தானியச் சந்தை யை அதானி குழுமத்தின் ஏகபோகத் திற்கு விடும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாகத் தான் மூன்று வேளாண் சட்டங்களை யும் மோடி அரசு கொண்டு வந்ததாக வும், இதனை இல்லையென்று பிர தமர் மோடியால் மறுக்க முடியுமா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி யுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அதற்கான உள்நோக்கம், இந்தியாவின் உணவு தானியச் சந்தையை பிரதமருக்கு நெருக்கமான கார்ப்பரேட் நண்பர் களிடம் ஒப்படைப்பதுதான். இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். அந்தச் சட்டங்கள் வந்திருந்தால், அதானி குழுமத்தின் ‘அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ்’தான் பெரிதும் பலன் அடைந்திருக்கும். இப்போதும்கூட இந்திய உணவுக் கழகத்தின் சில ஒப்பந்தங்களால் அந்நிறுவனம் பெரிய அளவில் பலன் அடைந்து வருகிறது. அண்மையில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.
ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக, ஒன்றிய அரசின் சதி, தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. கடந்த 2021 ஜூன் 30 அன்று, அதானி துறைமுகங்களுக்கு சாதக மாக குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு ஒன்றிய வர்த்தக அமைச்ச ராக இருந்த நிர்மலா சீதாராமன், பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு கழ கத்துக்கு எதிராகவும், அதானி குழு மத்துக்கு ஆதரவாகவும் நிலைப் பாடு எடுத்தார். மேலிடத்தின் தெளி வான உத்தரவு இல்லாமல் அப்படி செய்யக்கூடிய துணிச்சல் அவருக்கு இருக்குமா? பின்னர், பியூஸ் கோயல் ஒன்றிய வர்த்தக அமைச்ச ரான பிறகும் ஒன்றிய அரசின் நிலைப் பாடு மாறவில்லை. இதற்கிடையே, இமாசலப்பிர தேசத்தில் ஆப்பிள் கொள்முதலில் ஏகபோக அதிகாரம் செலுத்த அதானி நிறுவனம் அனுமதிக்கப் பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைப்பாரா? இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கேட்டுள்ளார்.