கொச்சி, மார்ச் 8- நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தொடர் விசாரணை நடத்தலாம் என உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. விசார ணையை ரத்து செய்யக் கோரிய நடிகர் திலீப்பின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் விசாரணை யை முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்திர குமாரின் அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் திலீப் தலைமையில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக இயக்குநர் பாலச்சந்திர குமார் கூறியதன் அடிப்படையில் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சதி செய்ததாக நடி கர் திலீப், அவரது சகோதரர் அனூப், அவ ரது மைத்துனர் சூரஜ் மற்றும் 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தி ருந்தனர். மூவரிடமும் விசாரணை நடத்தப் பட்டது. திலீப் மற்றும் அவரது கூட்டாளிகள் சமர்ப்பித்த 6 கைபேசிகளின் ஆய்வு அறிக்கைகளையும் உயர்நீதிமன்றம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது. பாலச்சந்திரகுமார் திடீரென வந்து புகார் கொடுத்தவர் அல்ல என்றும், காவல்துறை யில் புகார் அளிப்பதற்கும் ஊடகங்களிடம் வெளிப்படுத்துவதற்கும் ஒரு மாதத்திற்கு முன்பே முதலமைச்சரிடம் முறையீடு செய்த வர் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. விசாரணைக்கு என்ன தடை என்றும் நீதி மன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியது. சதி வழக்கு பதிவு செய்யத்தக்க தீவிர மான செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று திலீப் கூறினார். முதல் வழக்கில் உள்ள குறை களைத் தவிர்க்கவே மேலும் விசாரணை நடத்தப்படுவதாக விசாரணைக்குழு மீது திலீப் குற்றம் சாட்டினார்.