states

டெண்டர் முறைகேடு வழக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்க!

புதுதில்லி,ஏப்.4- முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.எவ்வித முகாந்திர மும் இல்லாததால்  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்று தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக  ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணி களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு பொன்னி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் , இந்த வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங் களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று உத்தரவிட்டது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளதால் திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்துவைத்தது. இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து லஞ்ச ஒழிப்புத் துறை 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்த ரவை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, எஸ்.பி.வேலு மணியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு, அறப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதில ளிக்க வேண்டும் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  அதில், டெண்டர் முறைகேடு வழக்கிற்கும், முதற்கட்ட விசாரணை அறிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  விசாரணையை இழுத்த டிக்கும் நோக்கத்திலும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலும்  எஸ்.பி.வேலுமணி மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.  மேல்முறை யீட்டு மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.