புதுதில்லி, ஜூன் 1- நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 2021-22 நிதியாண் டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்கள்) 4.1 சதவிகிதம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டு வளர்ச்சியைக் காட்டிலும் இது குறைவாகும். கடந்தாண் டின் மார்ச் காலாண்டில் ஜிடிபி 5.4 சதவிகி தம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. எனினும், 2021-22 நிதியாண்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8.7 சத விகிதமாக உள்ளது என்று தேசிய புள்ளியி யல் அலுவலக (NSO) அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. முந்தைய 2020-21 நிதி யாண்டில் மைனஸ் 6.7 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பாண்டில் பொரு ளாதாரம் வளர்ச்சி கண்டிருப்பதாக கூறப் பட்டுள்ளது. அதேபோல நாட்டின் அடிப்படைத் தொழிற்துறைகள் எனப்படும் நிலக் கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட் கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் வளர்ச்சியும் 2022 ஏப்ரலில் 8.4 சதவிகிதம் என்ற வளர்ச் சியை அடைந்திருப்பதாகவும் புள்ளிவிவ ரங்கள் வெளியாகியுள்ளன.