அன்னை தெரசா உருவாக்கிய ‘மிஷ னரிஸ் ஆப் சேரிட்டி’, வெளிநாட்டு நிதி உதவி பெற அளித்திருந்த புதுப் பித்தல் விண்ணப்பம் அண்மையில் ஒன்றிய அரசால் நிராகரிக்கப் பட்டது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான முந்தைய அனுமதி (Foreign Contribution Regulation Act (FCRA) registration) மார்ச் மாதம் வரை செல்லுபடியாகும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.