சென்னை, ஜூன் 14- பாஜகவின் துணை அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வந்தார். அமைச்ச ருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட காரணத்தினால், அவரை சந்திக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறியதால் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு ஆகியோரைச் சந்தித்து அமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விதமும், அதேபோல் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியிருப்பதும்
இந்தியாவில் பாஜக தலைமையிலான ஒரு காட்டாட்சி நடைபெறுவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. ஒருவர் மீது புகார் இருந்தால் அவரை விசாரிப்ப தற்கான சட்ட நெறிமுறைகள் உள்ளன. அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு வர வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருக்கலாம். அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும் அவரை விசாரணைக்கு வர வேண்டும் என அழைக்காமல் செவ்வாய்க்கிழ மை மாலை முதல் அவரை வீட்டுக்குள்ளேயே ஒரு கைதி போல் அடைத்து வைத்து, உணவு, மாத்தி ரை சாப்பிட விடாமல் விசாரணை நடத்தியுள்ள னர். அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட சந்திக்க விடாமல், நள்ளிரவு 3 மணிக்கு கைது செய்து பின் மருத்துவமனையில் அனுமதித்துள் ளனர். அமலாக்கத்துறை பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதைத் தான் இந்த விசாரணையும், கைதும் எடுத்துக் காட்டுகிறது.
போட்டி அரசாங்கமா?
தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு முன்பு முத லமைச்சருக்கு, தலைமைச் செயலாளருக்கு தக வல் தெரிவிக்கவில்லை. காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் துணை ராணுவப் படை யினரை வைத்து கொண்டு போட்டி அரசாங்கத் தை நடத்துவது போல் இந்த நடவடிக்கை உள்ளது. அமைச்சர் மீது புகார் இருக்கிறது என்றால் அவரை அழைத்து விசாரணை நடத்துங்கள், அதை யாரும் தடுக்கவில்லை. விசாரிப்பது தவறில்லை. ஆனால் இப்படி விசார ணை நடத்துவதுதான் முறையா? ஆர்.எஸ்.பாரதியும், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனும் அமைச்சரை பார்க்க சென்றபோது, அவர்களை அனுமதிக்கவில்லை. செந்தில் பாலாஜி என்ன தீவிரவாதியா? இந்த நாட்டை விட்டு ஓடி விடப் போகிறாரா? தலைமறைவாகி விடப் போகிறாரா? ஏன் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டும். பாஜக அரசை எதிர்த்தால் இப்படித்தான் மூர்க்கத்தனமாக நடந்துகொள் வோம், மிரட்டுவோம், ராணுவ தர்பாராக இருக்கும் என்று எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
பாஜக எம்.பி., பிரிஜ் பூஷணைக் கைது செய்யாதது ஏன்?
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசின் 3 அமைச்சர்கள் மீது ஆதாரப்பூர்வமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை விசாரிக்க அரசோ, அம லாக்கத் துறையோ தயாராக இல்லை. தில்லி யில் மல்யுத்த வீராங்கனைகள் 2 மாதகாலமாக அதன் தலைவராக இருக்கக் கூடிய பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்ற வழி காட்டுதலின் அடிப்படையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்க கூடிய பாஜக அரசு, தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சரை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கி றோம். இது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறை களை காலில் போட்டு மிதிக்கும் நடவடிக்கை யாகும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கே.பாலகிருஷ்ணன் பதில் அளிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது இதேபோல் தலைமைச் செயலகத்தில் நுழைந்து சோதனை செய்த போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதைக் கண்டித்தது. ஆனால் அன்று சேகர் ரெட்டி போன்றவர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையின் போது ஏராளமான ஆவணங்களும், கோடிக்கணக் கான ரூபாயும், தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போதும் முதலமைச்ச ருக்கு தெரிவிக்காமல் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தியது தவறு என்றுதான் கூறி னோம். ஆனால் தற்போதைய சோதனையில் என்ன ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டன, என்ன முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற எந்த விவரமும் இல்லையே! எதற்காக சோதனை என்று செந்தில் பாலாஜியிடம் கூட கூறவில்லை. இப்படிப்பட்ட சோதனை நடைமுறையை கண்டிக்கிறோம்.
மாநில அரசை, அமைச்சர்களை மிரட்ட வேண்டும்; திமுக உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகளை மிரட்ட வேண்டும்; பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் கைது செய்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இந்த சோதனை. இது போன்ற அடக்குமுறைக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சப்போவதில்லை. எத்தனையோ அடக்குமுறைகளை சந்தித்துதான் இன்றைக்கு நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு அமைச்சரை கைது செய்து விட்டால் 2024ஆம் ஆண்டு தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று விட முடியுமா? இதன் மூலம் பாஜக தனக்குத் தானே சவக்குழியை தோண்டிக் கொள்கிறது என்பதுதான் உண்மை. மருத்துவர்கள் ஆஞ்சியோ பரிசோதனை செய்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு உள்ள தாக கூறுவதை எப்படி நாடகமாடுகிறார் என்று கூற முடியும்? மருத்துவர்களுமா நாடகம் ஆடுவார்கள். எனவே மோடி அரசின் இந்த நடவடிக்கை யை கண்டித்து ஜுன் 16 (நாளை)கோயம்புத்தூ ரில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தடுத்து கூட்டுப் போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்படும்” என்றார்.