states

img

நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

புதுதில்லி, பிப். 6 - இந்தியர்கள் 104 பேர், கை- கால் களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்கா வால் நாடு கடத்தப்பட்டு சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற் படுத்தியுள்ள நிலையில், அதுதொடர் பாக ஒன்றிய பாஜக அரசு வாய்மூடி மவுனியாகி இருக்கிறது. இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்த்தும், மோடி அரசு அமெரிக்கா வை கண்டிக்கவோ, எதிர்த்து மூச்சு விடவோ கூடத் தயாரில்லை. இந்நிலையில், அமெரிக்கா வால் 104 இந்தியர்கள் அவமானப் படுத்தப்பட்ட சம்பவம் குறித்து விவா திக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தா வது நாளான வியாழக்கிழமையன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்க ளவைக் கூட்டம் தொடங்கியது. அப் போது, அமெரிக்காவில் இருந்து 100க்கும் அதிகமானோர் நாடு கடத்தப் பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். அதில் நமது மக்கள் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் அவர்களின் கண்ணிய த்தைக் காத்திடவும் இந்த அவை இந்த விவகாரத்தை உடனடியாக கையாள வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், டொனால்டு டிரம்ப் நிர்வாகத்து டன் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், அதனை விடுத்து கேள்வி நேரத்தை துவங்கி, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு டிரோன்களைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதத்தை மோடி அரசு  நடத்தியதால், ஆவேசமடைந்த எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இத னால், பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநி லங்களவையிலும் அமளி ஏற்பட்டது. 12 மணிக்கு மக்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் நாடு கடத்தல் விவகாரத்தை விவாதிக்கக் கோரி,  அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது, “நீங்கள் கூறும் விஷ யத்தை அரசு கவனத்தில் கொண்டுள் ளது. அது வெளியுறவுத்துறை சம்மந்தப் பட்ட விவகாரம். அது மற்றொரு நாட்டின் கொள்கை சம்மந்தப்பட்டது. அரசு இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளது” என்று சபாநாயகர் ஓம் பிர்லா சமாளிப்பில் இறங்கினார். எனினும் விவாதம் நடத்துவது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. அதேநேரம், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார். இதேநிலைதான்  மாநிலங்களவை யிலும் நிலவியது. அங்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர். இந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, பிற்பகலில் மாநிலங்களவையில் விளக்கம் அளித்த வெளியுறத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல. 2009-ஆம்  ஆண்டு முதல் பலர் நாடு கடத்தப் பட்டுள்ளனர். நாடு கடத்தும் செயல் முறையும் புதிதல்ல. அது பல ஆண்டு களாக இருந்து வருகிறது. இது ஒரு நாட்டுக்கு மட்டும் பொருந்தக்கூடிய கொள்கையும் அல்ல. 2025 பிப்ரவரி 5 அன்று இந்தியா வந்து சேர்ந்த இந்தி யர்கள் விஷயத்திலும் கடந்த கால நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. அதில் எந்த மாற்றமும் இல்லை.

அமெரிக்காவின் குடிவரவு மற்றும்  சுங்க அமலாக்கத்தால் (Immigra tion and Customs Enforcement) ஒழு ங்கமைக்கப்பட்டு, நாடு கடத்தல்கள் செயல்படுத்தப்படுகின்றன. விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதற்கான விதி முறைகள் 2012 முதல் அமலில் உள்ள  எஸ்ஓபி (standard operating proce dure)-யை அடிப்படையாகக் கொ ண்டவை” என்று முழுக்க முழுக்க  அமெரிக்க அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசினார். இது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதனால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, அமெரிக்காவை கண்டிக்க அஞ்சும் மோடி அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்கள், “தற்போது இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 மணி நேரம் சங்கிலி யால் கட்டப்பட்டிருந்தனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டி ருந்தது. கப்பல்களில் கன்டெய்னரில் ஏற்றப்பட்ட அவர்கள், கழிப்பறை களைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்க ப்படவில்லை. இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? பாஜக அரசு ஏன் அமைதியாக இருந்தது?” என்று கேள்வி எழுப்பினர். “அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பங்களித்துள்ளனர், அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியால் ஏன்  சொல்ல முடியவில்லை? குறைந்தபட் சம் அவர்களை மரியாதையுடன் அழைத்துவரக் கூட ஏன் விமானத்தை அனுப்ப முடியவில்லை? என்று எதிர்க் கட்சிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. பிரதமர் மோடி, ஆண்டுதோறும் 2  கோடி வேலைவாய்ப்புகளை உரு வாக்கும் வாக்குறுதியை நிறைவேற்றா ததன் காரணமாகவும், திறமைக்கேற்ற வேலை கிடைக்காததன் காரண மாகவே, அமெரிக்கா செல்ல வேண்டிய  நிலை வந்தது. தற்போது மோடி அர சால் அங்கும் அவர்களுக்கு அவ மானம் ஏற்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டனர்.

அமெரிக்கா நடத்தும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : சிபிஎம்

“நாடு கடத்தப்பட்டவர்களை அமெரிக்கா நடத்தும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாத தாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 104 இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் நாடு கடத்திய விதம் வருந்தத்தக்கதும், ஏற்றுக்கொள்ள முடியாத துமாகும். அவர்கள் கைவிலங்கிடப்பட்டு, அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் மிக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசாங்கமும், தனது குடிமக்கள் இவ்வாறு  நடத்தப்படுவதை எதிர்க்காமல் மிகவும் கோழைத்தன மான முறையில் தனது அணுகுமுறையைக் காட்டியிருக்கிறது. மேலும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் மனிதாபிமானத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதை மோடி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது. (ந.நி.)