போர்ட்பிளேர், மார்ச் 9- அந்தமான் நிகோபார் தீவுகளின் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர் தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று நடைபெற்றது. இதில், பஞ்சாயத்து தேர்தல் முடிவு கள் முழுமையாக வெளியாகாத நிலை யில்,நகராட்சிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கி ரஸ் மற்றும் பாஜக தலா 10 இடங்க ளையும், தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களையும், திமுக ஒரு இடத்தை யும், மீதமுள்ள ஒரு இடத்தில் சுயேச்சை யும் வெற்றி பெற்றுள்ளனர். போர்ட் பிளேயர் நகராட்சி கவுன்சி லில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் பாஜகவுக்கு 10 இடங்களும், காங்கி ரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு 11 இடங்களும் கிடைத்துள்ளன. இதை யடுத்து, பாஜகவோ, காங்கிரஸோ, போர்ட் பிளேயர் நகராட்சி நிர்வா கத்தை கைப்பற்ற வேண்டுமானால், தெலுங்குதேசம் கட்சி ஆதரவு இல்லா மல் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள் ளது. இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சி யின் மூத்த தலைவர் ஒருவர், “தெலுங்கு தேசத்தின் தேர்ந்தெடுக்கப் பட்ட கவுன்சிலர்கள் இருவரின் ஆத ரவைக் கோரி, ஏற்கெனவே பிற கட்சி கள் அணுகியுள்ளன. ஆனால், இறுதி முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன் சிலர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி யின் மாநிலக் குழுவால் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். போர்ட் பிளேயர் நகராட்சித் தலை வர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. அந்தமானில் வெற்றி பெற்ற இரண்டு தெலுங்குதேசம் கட்சி சார்பி லும் பெண் ஒருவர் (வார்டு எண் 5- செல்வி) வெற்றி பெற்றுள்ளார்.