states

img

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் - 1600 பேர் பலி

அங்காரா, பிப். 6 - மத்திய கிழக்கில் உள்ள நாடான துருக்கியின் (புதிய பெயர்: துர்க்கியே காசியான்டெப் மாகா ணத்தில் உள்ள நூர்டாகிக்கு கிழக்கே  23 கிலோமீட்டர் தொலைவில் திங்க ளன்று அதிகாலை 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் தெற்கே துருக்கி பகுதி, சிரியாவின் - துருக்கி எல்லைப் பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 7.8 ரிக்டர்  அளவு மிக அதிகமானது என்பதால் தெற்கு துருக்கியின் தியர்பாகிர் பகுதி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கட்டிடங்கள் தரை மட்ட மாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்கள் தங்களை காப்பாற்ற கூக் குரல் எழுப்பினர். துருக்கி நாட்டின்  தேசிய மீட்புக் குழுக்கள் மீட்பு  பணியை முழுமையாக துவங்குவதற் குள் அடுத்த 5 மணிநேரத்தில் அதே  பிராந்தியத்தில் 7.6 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட தெற்கு துருக்கி மற்றும் சிரிய  - துருக்கி எல்லை பகுதிகள் சின்னா பின்னமாகின. முதல் நிலநடுக்கத் தால் லேசான பாதிப்பை எதிர் கொண்ட கட்டிடங்களும் முற்றிலு மாக சாய்ந்தன. மீட்பு பணியில் இருந்த பொதுமக்கள், மீட்பு குழு வினர் பலரும் 2-வது நிலநடுக்கத் தில் சிக்கினர்.

திங்கள் மாலை 5 மணி நில வரப்படி (இந்திய நேரப்படி) நில நடுக்கத்தால் துருக்கியில் 1,014 பேர் இறந்துள்ளதாகவும், 5,385 பேர்  காயமடைந்துள்ளதாகவும் ஜனாதி பதி எர்டோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சிரியா - அகதிகள் பகுதியில் கடுமையான பாதிப்பு

துருக்கியின் அண்டை நாடான சிரியாவிலும் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டது. சிரிய எல்லையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலை வில் உள்ள காசியான்டெப் பகுதி முதல் பெரும்பாலான பகுதிகள் தரை மட்டமாகின. காசியான்டெப் பகுதி சிரிய உள்நாட்டுப் போரினால் லட்சக் கணக்கான அகதிகள்  வசிக் கும் பகுதியாகும். அடுத்தடுத்து நிகழ்ந்த 2 நிலநடுக்கத்தால் சிரியா வில் மாலை 5 மணி நிலவரப்படி 592 பேர் இறந்துள்ளதாகவும், 1,089 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

முதல் மற்றும் இரண்டாவது நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா  ஆகிய 2 நாடுகளிலும் சுமார் 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள னர். 7,000-க்கும் அதிகமானோர் காய மடைந்துள்ளனர். காயமடைந்துள்ள வர்களில் 600-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்ப தாகவும், நிலநடுக்கத்தில் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தக வல் வெளியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலி மற்றும் காய எண்ணிக்கை முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு மட்டுமானது. 2 மற்றும் 3-வது நிலநடுக்க பலி  மற்றும் சேத விவரங்கள் உறுதி யாக வெளியாகவில்லை. தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி, சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் கடும் பதற்றத்தில் உறைந்துள்ளனர்.

40 நாடுகள் உதவி

நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள துரு க்கிக்கு உதவ அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் உலக நாடுகளுக்கு  கோரி க்கை விடுத்துள்ள நிலையில் இந்தியா, ஜெர்மனி, நேட்டோ அமை ப்பு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் துருக்கிக்கு உதவ முன்வந்துள்ளன. செஞ்சிலுவைச் சங்கமும் மீட்பு பணியில் களமிறங்கியுள்ளது. ஆனால் போர் பிராந்திய பகுதியான சிரியாவிற்கு உலக நாடுகள் உதவு வது தொடர்பாக திடமான எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள், அகதிகள், பொதுமக்கள் மட்டுமே சிரியாவுக்கு உதவி வரு வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா உறுதி

“துருக்கி மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. இந்த துயரத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது” எனவும், மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களையும் அனுப்ப உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி துருக்கிக்கு உறுதி அளித்துள்ளார்.

5 நாடுகளில்...

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் சிரியா, லெபனான், இஸ் ரேல், எகிப்து ஆகிய 5 நாடுகளில் உண ரப்பட்டுள்ளது. துருக்கி, சிரியா பகுதிகளில் மட்டுமே பாதிப்பு விவரம் வெளியானது. லெபனான், இஸ்ரேல், எகிப்து நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை.