states

img

மோடி அரசு மூளையில்லாத அரசு; வங்கக் கடலில் தூக்கி எறிவோம்!

ஹைதராபாத், பிப்.2- “பாஜக அரசைத் தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும்; நாட்டின் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது”  என்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, 2022-23 நிதியாண்டிற்கான ஒன்றிய அர சின் பட்ஜெட்டை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் விவசா யத்திற்கு என்று எதுவும் அறிவிக்கவில்லை. உரம் மீது ரூ. 35 ஆயிரம் கோடி மானி யத்தை குறைத்து விட்டார்கள். இந்த கொரோனா காலகட்டத்தில், மக்களின் நல னுக்கென தனி நிதியை எதையும் பட்ஜெட் டில் ஒதுக்கவில்லை. லாபத்தில் இயங்கும் எல்ஐசியை எதற்கு விற்க வேண்டும்? எனவே, பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றி வங்கக் கடலில் தூக்கி  எறிய வேண்டும்.

பாஜக என்ன செய்தா லும், அதை நாங்கள் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம். இது ஜன நாயக நாடு. ஆனால், நாட்டின் பிரதமர் குறு கிய பார்வை கொண்டவராக இருக்கிறார். இந்த நாட்டில் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாற்றத்திற் கான தேவை வந்திருக்கிறது. நம் நாட்டிற்கு ஒரு புரட்சி தேவையாக இருக்கிறது. நாம் சண்டையிட்டால்தான் மாற்றத்தை காண முடியும். சிங்கப்பூர் அரசிடம் எதுவும் இல்லை. ஆனால் மூளை இருக்கிறது. மோடி அரசிடம் எல்லாம் இருந்தும் மூளை மட்டும் இல்லை. நாம் அரசியலமைப்புச் சட்டத்தை வலுப் படுத்த வேண்டும். இந்தியாவில் பட்டியல் வகுப்பினரும், பழங்குடியினரும் புறக்க ணிக்கப்படுகின்றனர். பாஜக அரசு மக் களை மோசமாக ஏமாற்றுகிறது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.