தெலுங்கானா முதல்வர் பேச்சு
ஹைதராபாத், பிப்.14- 2024 தேர்தலில் மக்கள் நலன்சார்ந்த அரசு மத்தியில் அமையும் என்றும், நரேந்திர மோடி நாட்டை விட்டே வெளியேற்றப்படுவார் என்றும் தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஹைதராபாத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது- “விவசாயிகள் விரும்பாத வேளாண் புதிய சட்டங்களை எதற்காக பாஜக கொண்டு வந்தது? போராட்டத்தின்போது பலர் உயிரி ழந்தனர். சட்டங்களை திரும்பப் பெற்ற பின் னர், பாஜக ஏன் விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை? வாட்ஸ் ஆப் மூலம் பாஜக பொய்களை பரப்பு கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றொரு தரப்பினருக்கு எதிராக நாடு முழுவதும் தூண்டப்படுகிறது. இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட அதைக் கேட்கிறேன். தாக்குதல் நடத்தியதற்கான ஆதா ரங்கள் எங்கே? ராகுல் காந்தியின் தந்தை கொல்லப்பட்டார். பாட்டி கொல்லப்பட்டார். அவருடைய தாத்தா நேரு நாட்டிற்காக சிறை சென்றார். அசாம் பாஜக முதல்வரால் இதுபோன்று சொல்லிக் கொள்வ தற்கு ஏதேனும் இருக்கிறதா? 2024-இல் பாஜக அல்லாத அரசு அமை யுமா அல்லது காங்கிரஸ் அல்லாத அரசு அமை யுமா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் நலன் சார்ந்த அரசு அமையும். இவ்வாறு கே. சந்திரசேகர ராவ் கூறி யுள்ளார். முன்னதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரசேகர ராவ், “நரேந்திர மோடியை நாட்டை விட்டு வெளியேறச் செய்வோம்” என்றும் எச்ச ரிக்கை விடுத்தார்.