புதுதில்லி, செப். 2 - சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்தின் ஜாமீன் மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை, குஜ ராத் உயர் நீதிமன்றத்தில் தாமதமாகி வந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளில் அம்மாநில காங்கிரஸ் எம்.பி. ஈஷான் ஜாப்ரி 69 பேரோடு சேர்த்து மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, சிறப்பு புலனாய்வுக் குழு அவர்கள் அத்தனை பேருக்கும் நற்சான்றிதழ் அளித்து வழக்கிலிருந்து விடுதலை செய்தது. ஆனால், ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியும், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் தும் நீதியை நிலைநாட்ட உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடினர். எனி னும், உச்சநீதிமன்றமும் மோடி உள்பட 64 பேரை அண்மையில் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. உச்ச நீதி மன்றத்தில் இந்த தீர்ப்பு மனித உரிமை அமைப்புகளுக்கு பேரிடியாக அமைந்தது.
இதனிடையே, உச்சநீதிமன்றமே தங்களை விடுதலை செய்துவிட்ட பின்னணியில், ஊக்கமடைந்த ஆட்சி யாளர்கள், ஒன்றிய ஆட்சியதி காரத்தைப் பயன்படுத்தி டீஸ்டா செதல் வாத் உள்ளிட்டோரை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினர். குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளில், நரேந்திர மோடியை வேண்டுமென்றே சிக்க வைக்கவும், ஆட்சியை கலைக்கவும் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று கூறி சமூக செயற் பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரை அக மதாபாத் குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஜூன் 25-ஆம் தேதி கைது செய்தது. குறிப்பாக டீஸ்டா செதல்வாத்தை அவரது வீட்டுக்குள் நுழைந்து தாக்கி கைது செய்தது. டீஸ்டா செதல்வாத்தின் கைதுக்கு ஐக்கிய நாடுகள் அவை உட்பட சர்வதேச சமூகம் தனது கண்ட னத்தைத் தெரிவித்தது. நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட உலகின் மிக முக்கியமான அறிஞர்கள் 11 பேர் கூட்டறிக்கையும் வெளியிட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரில், டீஸ்டா செதல்வாத் மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மட்டும் தங் களுக்கு ஜாமீன் கோரிய நிலையில், ஜூலை 30 அன்று அகமதாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு விசாரணை தாமதமாகி வந்தது. இதனால் டீஸ்டா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு வியாழனன்று தலைமை நீதிபதி யு.யு. லலித், எஸ். ரவீந்திர பட், சுதாஷனு துலியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘குஜராத் உயர்நீதிமன்ற த்தில் டீஸ்டா தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு மாநில அரசு பதிலளிக்க ஆகஸ்டில் உத்தரவிட்டு 6 வாரங் களுக்குப் பிறகு விசாரணையை ஒத்திவைத்தது ஏன்? ஜாமீன் மனு மீதான விசாரணையில் தாமதம் ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், “குற்றம்சாட்டப்பட்ட பெண்களுக்கு இதேபோன்று தாமதம் ஏற்பட்ட வழக்குகள் உள்ளதா? என்ற விவரங்களை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தெரி விக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட னர். அதனடிப்படையில் வெள்ளிக்கிழ மையன்று இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. அப்போது, 2002 குஜராத் வன்முறை வழக்குகளில் அப்பாவி மக்கள் மீது பொய்யான ஆவணங்களை தயாரித்த தாக கைது செய்யப்பட்ட வழக்கில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. “இந்த வழக்கை இடைக்கால ஜாமீன் நிலைப்பாட்டில் இருந்தே உச்சநீதிமன்றம் பரிசீலித்துள்ளது. மேலும், குஜராத் உயர் நீதிமன்றம் டீஸ்டா செதல்வாத்தின் ஜாமீன் மனுவை சுயாதீனமாகவும், இந்த நீதிமன்றத்தின் எந்த அவதானிப்புகளாலும் பாதிக்காமல் தீர்மானிக்கலாம்” என்றும் நீதிபதிகள் கூறினர். நிலுவையில் உள்ள வழக்கு விசார ணைக்கு டீஸ்டா செதல்வாத் முழு ஒத்து ழைப்பை வழங்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டீஸ்டா செதல்வாட், ஸ்ரீகுமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அளித்து, அடுத்த விசாரணையை செப்ட ம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
டீஸ்டா செதல்வாத்திற்கு வழங்கப் பட்டுள்ள இடைக்கால ஜாமீனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டீஸ்டா செதல்வாத் எந்தத் தவறும் செய்யவில்லை. வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களின் நீதிக்காக போராடுவது தவறா? அவர் இடைக்கால ஜாமீனில் விடு விக்கப்பட்டதை வரவேற்கிறோம். இந்த உத்தரவு, விசாரணையைத் தாமதப்படுத்தும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் அநீதியை நிவர்த்தி செய்வதாக உள்ளது. டீஸ்டா செதல்வாத்திற்கு எங்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.