states

img

இஸ்ரேல் தாக்குதலை சிரியா முறியடித்தது

டமாஸ்கஸ், பிப்.1- சிரியாவின் தலைநகர் டமாஸ்க சைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவிய ஏவுகணைகள் இடையிலேயே தடுத்து நிறுத்தி அழிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் உள்ள பஷர் அல் அஸாது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. 2011 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பயங்கர வாதக்குழுக்களுக்கு இந்த நாடுகள் ஆதரவு தருகின்றன. ஆயு தங்கள் மற்றும் பயிற்சிகளும் அக் ழுக்களுக்குத் தரப்படுகின்றன. அதோடு, சிரியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கும் வேலையையும் அமெரிக்க ராணு வம் செய்கிறது. சிரியாவின் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, அந் ்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல்க ளை மேற்கொள்வது என்று இஸ்ரேல் தொடர்ந்து சட்டவிரோத மாக செயல்பட்டு வருகிறது. தாக்கு தல்களை நடத்திவிட்டு அது பற்றி எதுவும் பேசாமல் இருப்பது வழக்க மாகும்.

தற்போது 12 ஏவுகணைகளை சிரியாவின் பல்வேறு பகுதிகளை நோக்கி இஸ்ரேல் ஏவியது. இந்த ஏவுகணைகளில் எட்டு ஏவு கணைகள் தலைநகரை நோக்கி செலுத்தப்பட்டவையாகும். அந்த எட்டு ஏவுகணைகளையும் தற்காப்பு அமைப்பின் மூலம் வரும் வழியி லேயே தடுத்து நிறுத்தி சிரிய ராணுவம் அழித்துவிட்டது. ஓரிரு ஏவுகணைகள் சில பகுதிகளில் விழுந்து சேதத்தை ஏற் படுத்தியுள்ளன. ஆனால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இஸ்ரேலின் ஏவுகணைகளை விண்ணிலேயே தடுத்து நிறுத்திய சிரியாவின் நட வடிக்கை மேற்கு ஆசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  டிசம்பர் 7, 2021 அன்று சிரியாவின் முக்கிய துறைமுகமான லடாகியா மீது ஏராளமான ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. அப்போது கடும் சேதம் ஏற்பட்டது.

இந்த முறை எட்டு ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தி இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். இந்தத் தாக்குதல்கள் மற்றும்  சிரியா அவர்களைத் தடுத்து நிறுத்தி யது ஆகியவை பற்றி இஸ்ரேல் மவுனம் சாதிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் பயங்கரவாதிகள் தாக்குதல்களை முறியடித்துள்ளதோடு, தற்போது இஸ்ரேலின் தாக்குதல்களையும் சிரியா சமாளிக்கத் துவங்கியுள்ள தை பெரும் ஆச்சரியத்துடன் அரசி யல் வல்லுநர்கள் பார்க்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யில், பஷர் அல் அஸாத்தின் ஆட்சி தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கூறி வந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.