states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

“ஸ்வச் பாரத் அபியான்” எனப்படும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமல் ஆக்கும் திட்டம் முற்றிலும் வெற்றி என மோடி அரசாங்கம் பிரச்சாரம் செய்தது; புள்ளி விவரங்களை அள்ளி வீசியது. இப்பொழுது 30 மாநிலங்கள்/ யூனியன் பகுதிகளில் ஒரு கிராமம் கூட திறந்த வெளி கழிப்பிடங்களிலிருந்து விடுதலை பெறவில்லை என அரசின் ஆய்வுகளே தெரிவிக்கின்றன.

செய்தி: பழங்கள்/காய்கறிகள் விற்பனை பாதியாக சரிவு! மக்கள் வாங்குவதை குறைத்துக் கொள்கின்றனர்!      யெச்சூரி:  ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசிகள் காரணமாக மக்களின் வேதனைகள் மலைபோல அதிகரிப்பு. மோடி அரசாங்கம் உடனடியாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை நீக்க வேண்டும். இது போக்குவரத்து செலவுகளை குறைத்து விலைவாசி உயர்வை குறைக்க உதவும். பொது விநியோக முறைகளையும் வலுப்படுத்தி மக்களை காப்பாற்றுங்கள்.

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கம் 15.08 சதவீதம். இடதுசாரிகள் மே 25-31 விலைவாசி எதிர்ப்பு இயக்கத்தில் பெருந்திரளாக  இணைவீர்! மக்களுக்கு நிவாரணம் வழங்க நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை தோற்கடிப்போம்.

கியான்வாபி மசூதியில் காணொலி மூலம் ஆய்வு நடத்த சொன்ன வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தவறானது. இதனை மதவாத சக்திகள் பயன்படுத்தும் ஆபத்து உருவாகும். இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் - 1991 மிக உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும். இத்தகைய முரண்பாடுகளை தவிர்க்கவே இந்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.

மல்யுத்த போட்டியில் இந்தியாவின் நிக்கத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேரிகோம்/சரிதா தேவி/ஜென்னி ஆகியோரின் தங்க பாரம்பரியத்தை முன்னெடுத்துள்ள இந்த மகத்தான வெற்றிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury