states

நேர்மையின்றி செயல்படக்கூடாது உச்சநீதிமன்றம் குட்டு

நேர்மையின்றி செயல்படக்கூடாது உச்சநீதிமன்றம் குட்டு

அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற் கான செயல்பாடுகள் குறித்து உச்சநீதி மன்ற நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவில்,“அமலாக்கத் துறை நேர்மையின்றி செயல்படக் கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு அமலாக் கத்துறை செயல்பட வேண்டும். அமலாக் கத்துறையின் 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 10க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங் கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தனது விசாரணையை மேம்படுத்த வேண்டும்.  குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்பட வில்லை என்றாலும், வழக்கு விசாரணை யே நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் அந் நபரை சிறையில் வைப்பதில் வெற்றிகர மாக செயல்பட்டுள்ளீர்கள். மக்களின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. 5, 6 ஆண்டு சிறையில் இருந்த பின், விடு தலை செய்தால் அவரது இழப்பை யார் சரிக்கட்டுவது? சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும்”  என கூறியுள்ளது.