புதுதில்லி, டிச.18- தில்லியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டத்தின் போது, வன்முறையைத் தூண்டிய தாகக் கூறப்படும் வெறுப்புப் பேச்சு கள் மற்றும் கருத்துகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக் குர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்ட 4 பாஜக தலைவர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். “தில்லியில் நடைபெற்ற வன் முறை தொடர்பான நபர்கள் மீது எப்ஐஆர் தாக்கல் செய்ய வேண் டும். வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க சுதந்திரமான சிறப்பு விசா ரணைக் குழுவை அமைக்க வேண் டும்.
தில்லியில் உள்ள அலுவலர் களை தவிர்த்து மற்ற மாநிலங்க ளைச் சேர்ந்தவர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிக்க வேண் டும்” என்ற தங்களின் கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மனு வெள்ளியன்று நீதிபதி கள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட வர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் ஆஜ ராகி வாதாடினார் அவர் “மனுதாரர்கள் நம் பிக்கை இழந்து வருகின்றனர். ஜாமியா மாணவர்களுக்கு என்ன நீதி? தில்லி வன்முறையில் பாதிக் கப்பட்டவர்களுக்கு என்ன நீதி? மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதி மன்றம் ஏற்கெனவே அறிவுறுத்திய போதிலும், உயர் நீதிமன்றம் நட வடிக்கைகளை தாமதப்படுத்து கிறது” என்று குற்றம் சாட்டினார். இவற்றைக் கேட்டுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “பாதிக் கப்பட்டவர்களின் மனுவை விரைந்து விசாரித்து, குற்றமிழைத்த வர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக மூன்று மாத காலத் திற்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று தில்லி உயர் நீதிமன்றத்திற்கு கெடு விதித்துள்ளனர்.