states

பாதுகாப்பு எனக்கூறி பத்திரிகையாளர்களை ஒடுக்கவா ஒன்றிய ஊடக அங்கீகாரக்குழு?

புதுதில்லி,பிப்.9-     25 உறுப்பினர்களுடன் ஒன்றிய ஊடக  அங்கீகாரக்குழு அமைக்கப்பட இருப்பதாக வும்,  நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்படும் பத்திரிகையாளா்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் ஒன்றிய  செய்தி-ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகை யாளா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை ஒன்றிய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் தலைவ ராக  மத்திய ஊடக அங்கீகாரக் குழு  (CMAC) முதன்மை இயக்குநர் ஜெனரல், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB)  தலைமையில், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப் பட்ட 25 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும்,  இந்தக் குழு, அதன் முதல் கூட்டம் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு  ஆண்டுகள் செயல்படும் மற்றும் பத்திரிகை யாளர்களின் அங்கீகாரத்தை இடைநிறுத்து வதற்கு பொறுப்பாகும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தவறான செய்திகளை வெளியிடும் பத்திரி கையாளா்களின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றும் அவ்வாறான சூழலில்  குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் முதல் அதிக பட்சமாக 5 ஆண்டுகள் வரை அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இணையவழி செய்தி வலைதளங்களுக்கும் புதிய விதிகள் பொருந்தும். அந்த வலை தளம் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே, அதில்  பணிபுரிபவா்கள் அங்கீகாரம் கோரி விண்ணப் பிக்க முடியும். அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் நபா்கள் அளிக்கும் தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம்  கோரி விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்படும்’’ ‘‘நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, வெளிநாடுகளுடனான நல்லு றவு, அமைதி, நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட வற்றை பாதிக்கும் வகையில் செயல்பட்டாலோ அல்லது அவதூறு பரப்புதல், வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, பத்திரிகையாளா்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.