states

img

போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறிய குஜராத் மாநிலமும் - அதானி துறைமுகங்களும்!

அகமதாபாத், ஜூலை 16 - குஜராத் மாநிலமும், நாட்டின் ‘நம்பர் ஒன்’ பணக்காரரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள ‘முந்த்ரா’ துறைமுகமும், இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக மாறி யிருக்கின்றன. இங்கு பலநூறு கோடி ரூபாய் மதிப்பில் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், அவை பிடிபடுவதும் வழக்க மான சம்பவங்களாகி விட்டன. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரான கவுதம் அதானி தனது ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் 12 துறை முகங்களை குத்தகைக்கு எடுத்துள்ளார். இவற்றில் பிரதமர் மோடியின் சொந்த மாநில மான குஜராத்தில் மட்டும் முந்த்ரா, டுனா,  தாஹேஜ், ஹசிரா ஆகிய நான்கு துறைமுகங் களை தனது கையில் வைத்துள்ளார். இதில், குஜராத்தின் ‘கட்ச்’ மாவட்டத்தி லுள்ள ‘முந்த்ரா’ துறைமுகத்தைப் பொறுத்த வரை ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனம் அனைத்து  கண்டெய்னர்கள், பேரல்கள், எரிவாயு ஆகிய அனைத்து சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்நிலையில்தான், இந்த துறைமுகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.  கடந்த 2021-ஆம் ஆண்டு முந்த்ரா துறை முகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி லான 2 ஆயிரத்து 988 கிலோ ஹெராயினை வரு வாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. ஈரான் நாட்டின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன்  எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்  பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்  படுத்தினர். அப்போதுதான் அதில் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.  இவற்றில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த போதை பவுடர்கள், ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருட்களின் சர்வ தேச மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதி காரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு  சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதைத்தொட ர்ந்து அகமதாபாத், தில்லி, சென்னை, காந்தி தாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரி கள் சோதனை நடத்தினர். ஹெராயின் கடத்தலில் அதானி துறை முகத்தின் பெயர் கடுமையாக அடிபடத் துவங்கி யதால், “எங்களுடைய கட்டுப்பாட்டில் துறை முகம் கையாளப்பட்டாலும், அதில் உள்ள கன்  டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை திறக்கும் அதி காரமும் அவர்களுக்கே உள்ளது. அதில் எங்க ளுடைய பணி ஒன்றும் இல்லை. இந்த விவ காரத்தில் உள்நோக்கத்துடன் எங்கள் குழு மத்தை தொடர்புபடுத்தி வெளியிடப்படும் செய்தி தவறானது” என அதானி குழுமம் மறுப்பு அறிக்கை வெளியிட்டது. எனினும், அதானி கட்டுப்பாட்டில் உள்ள முந்த்ரா துறைமுகம் மூலம் கடத்தல்கள் நடை பெறுவது நின்றபாடாக இல்லை. மாறாக, கடத்தல்கள் தொடர்கதையாக மாறின. கடந்த 2022 ஏப்ரல் 25-ஆம் தேதி, ரூ.1,439  கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அதி காரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபாவாவ் துறை முகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பி லான ஹெராயின் கடத்தப்படுவதாக மாநில பயங் கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கும், வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகளுக் கும் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பிபாவாவ் துறை முகம் விரைந்த அலுவலர்கள், கண்டெய்னர் களில் அதிரடி சோதனை நடத்தினர். 

இந்தச் சோதனையில், சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. முதற் கட்டத் தகவலில், இந்த 90 கிலோ ஹெராயினின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 450 கோடி என கூறப் பட்டது. அந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 2,180 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட் கள் கண்டுபிடிக்கப்பட்டன.  இந்த நிலையில்தான், தற்போது, ரூ. 376.5  கோடி மதிப்புள்ள உயர் தூய்மையான 75.3 கிலோ ஹெராயின் சிக்கியுள்ளது. இந்த சரக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் ப்ரீ சோனிலிருந்து மே 13 அன்று முந்த்ரா துறைமுகத்திலிருந்து மேற்கு வங் கத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் பஞ்சாப்பிற்கு கொண்டு செல்லப்பட இருந்துள்ளது. 

இதுதொடர்பாக பஞ்சாப் காவல் துறையிடம் இருந்து கிடைத்த தகவலைய டுத்து, பஞ்சாப் காவல் துறை சார்பு ஆய்வா ளருடன் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரி வினா் சோதனை மேற்கொண்டு, தைக்கப்படாத துணிகள் கொண்ட ஒரு கொள்கலனில், அட்டைக் குழாயைப் பயன் படுத்தி, அதிக  அளவு பிளாஸ்டிக் பைப் மூலம், மறைத்து  வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பிடிபட்டுள்ளது. இவ்வாறு குஜராத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், அதி லும் அதிகபட்சமாக அதானி கட்டுப் பாட்டிலுள்ள முந்த்ரா துறைமுகம் போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இதனிடையே, குஜராத்தில் பிடிபட்ட தைக் காட்டிலும் அதிகமான போதைப்பொருட் கள் கடத்தல் நடப்பதாகவும், கண்துடைப்பாக ஒரு சில கடத்தல்களை மட்டுமே அதிகாரி கள் கண்டு பிடித்து தடுக்கிறார்கள் என்றும் சமூக செயற் பாட்டாளர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.