states

img

மோடி ஆட்சியில் மக்களின் துயரம்தான் இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது..!

லக்னோ, பிப்.22- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இதுவரை 3 கட்டங்க ளாக 172 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.  இதுவரை நடந்த, இந்த 3 கட்ட தேர்த லிலும் சமாஜ்வாதிக்கே மக்கள் அதிகள வில் வாக்களித்திருப்பதாகவும், நிலைமை பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தி, ராமர் கோயில், ஜின்னா, பாகிஸ்தான் என எவ்வளவோ மத உணர்ச்சியைத் தூண்டியும் அவை போது மான அளவிற்கு பாஜகவுக்கு கை கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள் ளது. இது ஆர்எஸ்எஸ் - பாஜக தலை மைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உ.பி. மாநிலத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கும் சாமியார்களை, பாஜக நேரடி யாக களத்தில் இறக்கியுள்ளது. அலகாபாத்தில் நடைபெற்று வரும் மகர மேளாவில், சாமியார்களின் அகில இந்திய அமைப்பான ‘அகில பாரதிய அகாடா பரிஷத்’தின் கூட்டமும் நடைபெற் றுள்ளது. இதில், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு பாடுபடு வது சாமியார்கள் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர்.

‘‘உ.பி. ஆட்சி மீண்டும் சாமியார்கள் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்காக பாஜக வெற்றி பெற நாம் அனை வரும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பொது மக்களை சாமியார்கள் நேரில் சந்தித்து பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க வேண்டும். சாமியார்களின் முதல்வராக மீண்டும் ஆதித்யநாத் தொடர அனை வரும் பாடுபடுவது அவசியம்’’ என்று தீர்மானத்தில் சாமியார்கள் குறிப்பிட் டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ‘அகில பாரதிய அகாடா பரிஷத்’தின் புதிய தலைவரான மஹந்த் ரவீந்திராபுரியின் அறிவுறுத்த லின் பேரில், பல்வேறு சாமியார் அமைப்புகள் பாஜக-வுக்கு ஆதரவாக உடனடியாக பிரச்சாரத்தில் இறங்கியுள் ளன.  இவர்கள், “இந்துக்களின் கலாச்சா ரம் நிலைக்கவும் இந்து ராஜ்ஜியம் அமைக்கவும் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று வீடுவீடாக நேரில்  சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த சாமியார்கள் அணியில், ராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை மற்றும் பாஜக தோழமை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிசத்தின் சார்பிலும் ஆட்கள் இடம்பெற்றுள்ளனர்.  இவர்கள் தவிர, இணையதள கல்வி பெற்ற 100 இளம் சாமியார்கள், உ.பி. தேர்தல் பிரச்சாரத்துக்காக நிய மிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியாக சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதன் மூலமாக பிரச்சாரத்தை ஆரம்பித் துள்ளனர். 36 இளம் துறவிகள் மூலம் பாஜக ஆதரவு பிரச்சாரத்துக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களும் தொடங்கப் பட்டுள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் அடுத்துவரும் 4 கட்டத் தேர்தல்கள் உ.பி.யின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நடைபெற உள்ளன என்பதும், இந்த பகுதிகளில் இந்துக்களின் வாக்குகள் அதிகம் என்ப தும் குறிப்பிடத்தக்கது.