states

img

மோடி அரசை தூக்கி எறிய மக்கள் இயக்கம்: சிபிஎம்-சிபிஐ மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

ஹைதராபாத், ஏப்.11- நாட்டின் அரசமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்க மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்றும், அதற்கான வெகுஜன இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். ஹைதராபாத்தில் உள்ள கண்காட்சி மைதானத்தில் சிபிஎம் மற்றும் சிபிஐ சார்பில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் யெச்சூரி பேசினார். அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாஜக ஆட்சியை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, மாநில செயலாளர் தம்மினேனி வீரபத்ரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா, மாநில செயலாளர் குணம்நேனி சாம்பசிவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.