states

img

மோடியைப் புகழ்ந்து பாட்டு; களேபரமான திருமண ஊர்வலம்

லக்னோ, மார்ச் 14 - உத்தரப் பிரதேச மாநி லத்தில், பிரதமர் நரேந்திர மோடி யைப் புகழ்ந்து பாடல் ஒலி பரப்பிய திருமண வீட்டார்,  அடையாளம் தெரியாதவர் களின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை இரவு திரு மண ஊர்வலம் ஒன்று நடைபெற் றுள்ளது. அதில், உத்தரப் பிரதே சத்தில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்வர் ஆதித் யநாத்தையும் புகழ்ந்து பாடல் கள் ஒளிபரப்பப்பட்டு உள்ளன.  இதனால் ஆத்திரமடைந்த- அடையாளம் தெரியாத நபர்கள்  சிலர், ஊர்வலத்தில் நுழைந்து பாடலை நிறுத்துமாறு ரகளை யில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், ஊர்வலத்தில் பங்கேற்ற வாகனங்களை அடித்து நொறுக்கி, காருக்குள் இருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் நகையையும் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.