states

img

92 சதவிகிதம் அதிகரித்த கிரெடிட் கார்டு பயன்பாடு செலவுகளை சமாளிக்க முடியாமல் கடனாளிகளாக மாறும் இந்தியர்கள்!

ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்

புதுதில்லி, பிப்.21- கொரோனாவுக்கு பின்பு, கடன் அட்டை  எனப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்  இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதி கரித்து இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அண்மையில் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அதாவது, கொரோனாவுக்குப் பின், மக்கள்  தங்களின் செலவுகளை சமாளிக்க முடியாமல்  நாளுக்கு நாள் கடனாளியாக மாறி வருகின்ற னர். கிரெடிட் கார்டு மூலம் கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்று அதிர்ச்சிகரமான உண்மை அம்பலமாகி இருக்கிறது. 2016-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார். கறுப்புப் பணம், கள்ளப்பணம் ஒழிப்பது, ரொக்கப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல்  பரிவர்த்தனையை அதிகரிப்பது ஆகியவையே  பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் கூறினார். ஆனால், அவர் கூறிய  எதுவுமே நடக்கவில்லை.  இதில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிக ரித்தாலும், ரொக்கப் புழக்கம் குறையவில்லை. முன்பை விட அதிகமாகவே ரொக்கப் புழக்கம் உள்ளது. அண்மையில் டிஜிட்டல் பரிவர்த்தனை களின் வளர்ச்சி குறித்து மக்களவையில் எழுப்  பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதி லளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத், “அரசின் பல்வேறு நட வடிக்கைகள் காரணமாக 2018-19 நிதியாண்டிலி ருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அள வில் 200 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.  2018-19 நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற  எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகள் நடைபெற்றன. 2021-22 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 கோடிகளாக அதி கரித்துள்ளது” என்று கூறினார்.

இது உண்மைதான். டிஜிட்டல் பரிவர்த்த னைகள் அதிகரித்துள்ளன. ஆனால், முன்பு ஏடிஎம் கார்டுகள் எனப்படும் டெபிட் கார்டுகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகள் நடந்து வருகின்றன. அதாவது மக்கள் தங்களின் கையிருப்பிலிருந்து பணத்தை செலவழித்து வந்தனர். ஆனால், பணமதிப்பு நீக்கம் மற்றும் கொரோனா என அடுத்தடுத்து விழுந்த அடி,  ஏழை, நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமன்றி, மத்திய தர வர்க்கத்தினரையும் கடுமையாக பாதித்து விட்டது. தொழில்கள் நசிவு, வேலை யில்லாத் திண்டாட்டம், தொடர் விலைவாசி உயர்வு, கடன் வட்டி விகித உயர்வு, பணவீக்கம் பலவகையிலும் விழுந்த அடி, இப்போது வரை அவர்களால் மீண்டெழ முடியவில்லை. மறுபுறத்தில் அன்றாட வாழ்க்கையை ஓட்டு வதற்கு செலவுகளையும் சமாளித்தாக வேண்  டிய கட்டாயத்தில் தள்ளியது. விளைவு, கட னாளியாக மாற வேண்டிய கட்டாயம். இந்த பின்னணியிலேயே, இந்தியர்கள் தற்போது கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

2020 முதல் 2021 வரையிலான காலத்தில் கிரெடிட் கார்டு பயன்பாட்டின் மூலம் நடை பெற்ற பணப் பரிவர்த்தனை ரூ. 6 லட்சத்து 30 ஆயிரத்து 414 கோடியிலிருந்து, ரூ. 10 லட்சத்து  49 ஆயிரத்து 065 கோடிகளாக அதிகரித்துள் ளது. 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022 டிசம்பர் மாதம் வரை கிரெடிட் கார்டு பயன்பாடு 92 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  இதேநேரத்தில் டெபிட் கார்டு மூலம் நடை பெற்ற பண பரிவர்த்தனை ரூ. 6 லட்சத்து 61 ஆயி ரத்து 385 கோடியிலிருந்து ரூ. 5 லட்சத்து 61 ஆயிரத்து 450  கோடியாக குறைந்துள்ளது. 2019 டிசம்பரில் டெபிட் கார்ட் மூலம் செய்யப்  பட்ட பண பரிவர்த்தனை ரூ. 83 ஆயிரத்து 953 கோடியாக இருந்தது. இது 2020 டிசம்பரில் ரூ.63 ஆயிரத்து 487 கோடி, 2021 டிசம்பரில் ரூ. 93 ஆயிரத்து 907 கோடி என இருந்தது, 2022  டிசம்பரில் ரூ. 58 ஆயிரத்து 625 கோடி என சுமார்  30 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்திய மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்த னைகளை ஊக்குவிக்க கூகுள் பே, போன் பே போன்ற மொபைல் ஆப்கள் அதிகமான அள வில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதும், ஆன்  லைன் ஷாப்பிங், மொபைல், டிவி ரீசார்ஜ்  போன்றவற்றுக்கு அளிக்கப்படும் சலுகை களும் மக்களை மேலும் மேலும் கடனாளி யாக்கி வருவதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவ ரங்கள் தெரிவிக்கின்றன.