states

img

டேராடூன் டிஏவி கல்லூரியில் மாணவர் சங்க துணைத் தலைவர் பதவியை பிடித்தது எஸ்எப்ஐ

புதுதில்லி, டிச.29- இருபதாண்டுகளில் முதன்முறையாக, உத்தர கண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள முன்னணி கல்லூரியான டிஏவி கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் எஸ்எப்ஐ பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய துணைத் தலைவராக எஸ்எப்ஐயைச் சேர்ந்த சோனாலி தேர்வு செய்யப்பட்டார். சோனாலி 592 வாக்குகள் பெரும் பான்மையில் ஏபிவிபி வேட்பாளரை தோற்கடித்தார். சோனாலி மொத்தம் 1572 வாக்குகள் பெற்றார். ஏபிவிபியும் என்எஸ்யுஐயும் நேருக்குநேர் மோதும் கல்லூரியில் இம்முறை எஸ்எப்ஐயும் மற்றொரு சுயேச்சை மாணவர் அமைப்பும் பலத்த போட்டியை ஏற்படுத்தின. ஏபிவிபி தலைவர் பொறுப்பை யும், சுயேச்சை அமைப்பு செயலாளர் பொறுப்பை யும் கைப்பற்றியது. உத்தரகண்டில் உள்ள மற்ற கல்லூரிகளின் முடிவுகளும் வெளியானது. இதில் என்எஸ்யுஐ ஏமாற்றம் அடைந்துள்ளது. ஸ்ரீநகர் பல்கலைக் கழகத்தில் பொருளாளர் பதவியையும், கர்ண பிரயாக்கில் உள்ள ஒரு கல்லூரியில் பொது இடத் தையும் எஸ்எப்ஐ வென்றுள்ளது.