states

இந்திரா காந்தியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள்தான் ஆர்எஸ்எஸ் தலைவர்கள்!

புதுதில்லி, ஜூன் 26 - 1975 அவசர நிலைக் காலத்தின்போது, இந்திரா காந்தியிடம் மன்னிப்புக் கடி தம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையானவர்கள்தான் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் என்று பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணியசாமி கூறி யுள்ளார். இந்திரா காந்தி பிரதம ராக இருந்தபோது, 1975-ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று அவ சர நிலைக்காலம் அமல்படுத் தப்பட்டது. இந்த அவசர நிலைக் காலத்தை நினைவு கூர்ந்து, இரண்டு நாட்களு க்கு முன்பு, தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதி விட்ட, பிரதமர் நரேந்திர மோடி, “அவசர நிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.” என்று கூறியிருந்தார். மேலும், ‘ஜனநாயகத் தின் கறுப்பு நாட்கள் (#Dark DaysOfEmergency) என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள் ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றி லும் எதிரானது” என்றும் பதி விட்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி யின் இந்த டுவிட்டர் பதிவைக் குறிப்பிட்டுத்தான், சுப்பிர மணியசாமி, தற் போது பக்கத்தில் விமர்சித்து ள்ளார்.

23 ஆண்டுகளுக்கு முன் னர் ‘தி இந்து’, ‘பிரண்ட் லைன்’ இதழ்களில் அவசர நிலைக் காலத்தில், பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைவர்கள் செயல்பட்ட விதம் குறித்து குறிப்பிட்டுள் ளார். “1975 மற்றும் 1977-க்கு இடைப்பட்ட காலத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பெரும்பாலான தலை வர்கள் அவசரநிலைப் பிரக டனத்துக்கு எதிரான போரா ட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளாகத்தான் இருந் தார்கள்.  மகாராஷ்டிராவின் புனே எரவாடா சிறையில் அடைக் கப்பட்டிருந்த ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் பாலாசாகேப் தேவரஸ், இந்திரா காந்திக்கு எண்ண ற்ற மன்னிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார்.  ‘அக்கடிதத்தில் ஜெய பிரகாஷ் நாராயணுடன் ஆர்எஸ்எஸ் இயக்கம் இணைந்து செயல்படாது; இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தை ஆதரிக்கிறோம்’ எனவும் தேவரஸ் குறிப்பிட் டிருந்தார். மேலும் அப்போது இந்திரா காந்தி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவ ரான வாஜ்பாய் பங்கேற்க வில்லை. இதற்கு வாஜ்பாய் எழுதித் தந்த மன்னிப்பு கடிதம்தான் காரணம்” என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.