states

தீக்கதிர் விரைவு செய்திகள்

70 நாட்களுக்கு ஒரு முறையா?
 

தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும்.  சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது. தனியார் நிறுவனங்களில் கட்டண கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

- டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்

“தமிழைத் தேடி...”

தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம்.தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.  

- மருத்துவர் இராமதாஸ், பாமக நிறுவனர்

தள்ளாடுகிறார் ரங்கசாமி!

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி வந்த சட்ட அமைச்சர் கிரண்  ரிஜிஜுவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானதுதான். ஆனால், மாநில அந்தஸ்து தர ஆலோசனை தருமாறு நீதிபதிகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதல்வர் கூறியுள்ளது புரியாத புதிர். நீதிபதிகள் ஆலோசனை சொல்பவர்கள் அல்ல. சட்ட வல்லுநர்களைதான் அவர் ஆலோசிக்க வேண்டும். எங்கு  எந்த கோரிக்கை வைப்பது என்பது தெரியாமல் முதல்வர் தள்ளாடுகிறார்.  அதே நேரத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் மனு தரும்போது பாஜக தரப்பு தேவையில்லை என்பது முரண்பாடானதாக உள்ளது.

-புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

வன்கொடுமைத் தடுப்பு உளவுப்பிரிவு!

சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்கொடுமை களை முன்னெச்சரிக்கையாகத்  தடுப்பதற்கு ஏதுவாக   கண்காணிக்கும் உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

- தொல்.திருமாவளவன் எம்.பி., விசிக தலைவர்

‘கனிம’ வருவாய்... ஆகாது!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரி மணல் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் குதிரைமொழி, சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தலா 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவி  ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயற்கை  வளங்களை, குறிப்பாக கனிம வளங்களை கொண்டு அரசின் வரு வாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது, தவறான முடிவா கும். தேரி மணல் மற்றும் தாது மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெ டுக்கும் நடைமுறை அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.

 - தி.வேல்முருகன், வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்

ஒன்றிய அரசின்  போட்டித் தேர்வை தமிழில் எழுதலாம் 

சென்னை,ஜன.20- ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  ஒன்றிய அரசுத் துறைகளில் காலி யாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதத் தகுதியா னவர்கள் இணையதளம் மூலமாக பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப். 23, 24 ஆகிய தேதிகளில் தேர்வர்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த  தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்க ளுக்கான கணினி வழித்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ளது. வழக்கமாக எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மாநில மொழிகளிலும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்த  வேண்டும்என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், இந்தக் கோரிக்கை களை ஏற்று, எஸ்எஸ்சி போட்டித் தேர்வு கள் தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி,  குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பழநி கோயில் தரிசன  டிக்கெட்டுகளில்  ‘க்யூஆர் கோடு’

பழநி,ஜன20- பழநி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் உள்ளிட்ட டிக்கெட்டுகளில் ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் கட்டண சேவை டிக்கெட்டுகளை ஒரு முறை மட்டுமே  பயன்படுத்துவதற்கான ‘க்யூஆர் கோடு’ வசதியை கடந்த வாரம் அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து, இத்திட்டம் அனைத்து கோயில்களிலும் செயல் படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.10, ரூ.20, ரூ.100  கட்டண தரிசனம், தங்க ரதம் இழுப்ப தற்கும், காது குத்துவதற்கும், தங்கத்  தொட்டிலில் குழந்தையை தாலாட்டு வதற்கும், அன்னதானம் மற்றும் பிற  இனங்களுக்கும் வழங்கியதற்கான ரசீது உள்ளிட்டவற்றில் ‘க்யூஆர் கோடு’ அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. க்யூஆர் கோடு, கோயில் பணி யாளர்கள் மூலம் ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்படுகிறது. அதற்காக, 10-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஸ்கேனிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு முறை ஸ்கேன் செய்த டிக்கெட்டை  மீண்டும் பயன்படுத்த முடியாது. ஸ்கேன்  செய்யாமல் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் அல்லது கண்காணிப்பாளரிடம் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜன.20- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக தமிழ்நாட்டில் கடலோர  மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறை வாக இருக்கக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங் கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை  30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறிய இரு பட்டாசு  ஆலைகளுக்கு சீல்வைப்பு

விருதுநகர், ஜன.20- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் விதிமுறைகளை மீறிய இரு பட்டாசு ஆலைகளுக்கு  வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். சிவகாசி அருகே வியாழனன்று  இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட  வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். எனவே, பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறதா? என ஆய்வு செய்திட  மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து,   இராஜபாளையம்,  முடங்கியார் சாலையில் உள்ள சம்மந்தபுரம் கிராமத்திற்கு உட்பட்ட சிவசக்தி பட்டாசு ஆலை மற்றும் கொத்தங்குளம் கிராமத்திற்கு உட்பட்ட ஜெயலட்சுமி பட்டாசு ஆலை ஆகியவற்றில்  வட்டாட்சியர் ராமச்சந்திரன்,  துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.  அதில் இரு பட்டாசு ஆலைகளிலும் அரசு உத்தரவை மீறி விதிமுறை மீறல்களில்  ஈடுபட்டது தெரியவந்தது.எனவே, இரண்டு பட்டாசு ஆலைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஜி.20 மாநாடு: மாமல்லபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம்,ஜன.20- ஜி20 கூட்டமைப்பு நாடு களுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது.  இதைத் தொடர்ந்து ஜி 20  மாநாடு நடைபெற இருக்கி றது.   மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள  பல்வேறு மாநில தலை நகரங்கள் மற்றும் முக்கி யத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 31 மற்றும் பிப்ரவரி 1,  2 ஆகிய 3 நாட்களில் சென்னையிலுள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்க ளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மாநாட்டில் அர்ஜெண் டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதி நிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட் டுக்கு வரும் வெளிநாட்டு  பிரதிநிதிகள் மாமல்ல புரத்திலுள்ள புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின் றன. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் செய்யப் பட்டுள்ள வரவேற்பு ஏற் பாடுகள் மற்றும் பாது காப்பு குறித்து சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப்  நந்தூரி ஆய்வு செய்தார்.  அப்போது வெளி நாட்டி னரை வரவேற்க எந்தந்த இடத்தில் கலைநிகழ்ச்சி குழுவினர் இருக்க வேண் டும். பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.

தொழிலாளர் கட்சி வெற்றி

செயின்ட் ஜான்ஸ், ஜன.20- ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான தொழி லாளர் கட்சிக்கு மீண்டும் பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. தொழிலாளர் கட்சியின் தலைவரான காஸ்டன் பிரவுன் தற்போது பிரதமராக இருக்கிறார். அவர் தலைமையிலான ஆன்டிகுவா மற்றும் பார்புடா தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைத்துள்ளன. மீண்டும் காஸ்டன் பிர வுன் பிரதமராகத் தொடர்வார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அவர் போட்டியிட்ட தொகுதியின் தொடக்க கட்ட எண்ணிக்கையின்படி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கட்சி, ஜனநாயக  தேசியக் கூட்டணி, பெர்முடா மக்கள் இயக்கம் மற்றும் சில சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த முள்ள 17 இடங்களில் ஆளுங்கட்சிக்கு 9  இடங்களும் ஐக்கிய முற்போக்குக் கட்சிக்கு  5 இடங்களும், பெர்முடா மக்கள் இயக்கத் திற்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. இன்னும் இரண்டு இடங்களுக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், முதல் வாழ்த்துச் செய்தி கியூபாவில் இருந்து வெளியானது. அந்நாட்டின் வெளி யுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதம ராக மீண்டும் பொறுப்பேற்க இருப்ப தற்கும் பிரதமர் காஸ்டன் பிரவுனுக்கு  எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.  வரலாற்று ரீதியான நட்புறவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பலப் படுத்துவதை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.