போபால், ஏப்.11- ராமநவமியையொட்டி, சங்-பரி வாரங்கள் ஊர்வலம் என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல வரத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில், மத்தியப் பிரதேசம், குஜ ராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில், கல்வீச்சு, வீடுகள், போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு ஆகியவற்றுடன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். பாஜக ஆட்சி நடக்கும் ம.பி. மாநி லம் கார்கோன் பகுதியில் ராம நவமி யை ஒட்டி ஊர்வலம் நடத்திய சங்-பரி வாரங்கள், முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதையொட்டி அங்கு கல்வீச்சு, தீவைப்பு உள்ளிட்ட வன்முறை ஏற்பட்டுள்ளது. போலீஸ் வாகனங்களும், வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. தற்போது தலப் சவுக் பகுதி உட்பட மாநிலத்தில் 3 இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.
இதேபோல் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மற்றும் சபர்கந்த் மாவட்ட ராம நவமி ஊர்வலங்களிலும் வன் முறை அரங்கேற்றப்பட்டு உள்ளது. இங்கும் கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், கம்பத் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள் ளார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட் டம் சிவ்பூர் பகுதியில் ஏற்பட்ட ராம நவமி வன்முறையில் உடனடியாக, போலீசார் குவிக்கப்பட்டதன் காரண மாக, பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வல வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தற்போது, லோஹர்டக் பகுதி முழுமை யும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகத்திலும் சங்-பரிவாரங்கள் கொலைவெறியாட்டத்தை நடத்தி யுள்ளனர். பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் உள்ள மாண வர்கள் இரவில் உணவு உண்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், “ராமநவமியன்று அசைவ உணவு சாப்பிடுவீர்களா? என்று கேட்டுக் கொண்டே கற்கள் மற்றும் டியூப் லைட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பூந்தொட்டிகளை யும் தூக்கி வீசியுள்ளனர். தொழில் முறை ரவுடிகளையும் அழைத்துவந்து இந்த தாக்குதலை அவர்கள் அரங் கேற்றியதாக கூறப்படும் நிலையில், மாணவ- மாணவியர், அசைவ உணவு சமைத்த மெஸ் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 50 முதல் 60 பேர் வரை இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் நடந்த ஞாயிறன்று இரவு, ஜேஎன்யு துணைவேந்தரும், சங்-பரி வார் பேர்வழியுமான சாந்திஸ்ரீ துளிப்புடியின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்த தாகவும் மாணவர் தரப்பில் குற் றச்சாட்டு எழுந்துள்ளது.