states

img

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் சதியை தகர்த்த சமாஜ்வாதி

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்  பிரதேச மாநிலத்தின் மீராபூர், குண்டார்கி,  காஜியாபாத், கைர், கார்கல், சிசாமு, புல்பூர், காதேகரி, மஜ வான் உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக் கிழமை காலை 8 மணி அளவில் துவங்கியது. குண்டார்கி, காஜி யாபாத், கைர், புல்பூர், காதே கரி, மஜவான் உள்ளிட்ட 6 தொகு திகளில் பாஜகவும், மீராபூரில் பாஜக கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளமும், “இந்  தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி கார்கல், சிசாமு உள்ளிட்ட தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.  இந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா, முஸ்லிம் மக்களை வாக்க ளிக்க விடாமல் தடுத்தல் உள்  ளிட்ட பல்வேறு சித்து விளை யாட்டுகளை அரங்கேற்றியது. மேலும் மாநில பாஜக முதல்வர்  ஆதித்யநாத் 9 தொகுதிகளி லும் பாஜக கூட்டணியே வெல்  லும், சமாஜ்வாதி டெபாசிட் கூட  வாங்காது எனக் கூறினார். ஆனால் சமாஜ்வாதி அனைத்து  தொகுதிகளிலும் இரண்டாமிடம்  பிடித்ததுடன் கார்கல், சிசாமு  உள் ளிட்ட 2 தொகுதிகளில் அபார  வெற்றியும் பெற்று, உத்தரப்பிர தேசத்தில் பாஜகவின் சதியை தகர்த்துள்ளது.