டெஹ்ரான், ஜன.31- ரஷ்ய மற்றும் ஈரான் வர்த்தக ஒப்பந்தங்களில் ஒரு முக்கிய மான கட்டத்தை இரு நாடுகளும் எட்டியுள்ளன. அண்மையில் ஈரான் ஜனாதிபதியும், ரஷ்ய-ஈரான் நாடாளுமன்ற நட்புக்குழுவின் தலைவருமான இப்ராகிம் ரெசாய் ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது ஏராளமான துறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இரு தரப்பு வர்த்தகத்தில் அந்நிய செலாவணியைப் பயன்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. உலகம் முழுவதும் பிற நாடுகளோடு வர்த்தகம் மேற்கொள்ள டாலரைத்தான் பயன்படுத்துகிறார்கள். டாலரை நம்பி இருக்க வேண்டிய நிலைமை இதனால் உருவாகியுள்ளது.
தங்கள் வர்த்த கத்தில் சொந்த நாணயங்களையே பயன்படுத்தலாம் என்று ரஷ்யாவும், ஈரானும் கருதியுள்ளன. உடனடியாக அனைத்துத் துறை வர்த்தகங்களிலும் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதால், முதல் கட்டமாகப் போக்குவரத்துத் துறையில் டாலரைப் பயன்படுத்தாமல் இருப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். டாலரை பயன்படுத்தாமல், ரஷ்ய மற்றும் ஈரான் நாணயங்க ளைப் பயன்படுத்துவதால் இருதரப்பு வங்கித்துறைகளும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உருவாகும். எனவே, இது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இப்ராகிம் ரெசாய் பங்கேற்றுள்ளார். நாணயப் பரிமாற்றத்தில் மேலும் முன்னேற் றம் காண இருதரப்பும் பெரும் கவனம் செலுத்தவிருக்கிறது. ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு செய்வது என்று இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன. எரிபொருள் துறையில் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், மேற்குலகப் பன்னாட்டு நிறு வனங்களை நம்பியிருப்பதில் இருந்து விலகிக் கொள்ள முடியும் என்றும் இப்ராகிம் ரெசாய் கருத்து தெரிவித்துள்ளார். அவ ருடைய ரஷ்யப்பயணம் மிகப்பெரிய சாதனையைப் படைத்தி ருக்கிறது என்று ஈரானின் வெளியுறவுத்துறை கருத்து தெரி வித்துள்ளது.