அதிருப்தியடைந்த உச்ச நீதிமன்றம்
புதுதில்லி, பிப். 3 - மத அடிப்படையிலான வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ள போதிலும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரி வித்துள்ளது. மேலும், எங்களின் உத்தரவு மதிக்கப்படாத நிலையில், இதுதொடர் பான வழக்குகளை விசாரிப்ப தற்கும், மீண்டும் மீண்டும் உத்தரவு களைப் பிறப்பிப்பதற்கும் எங்களுக் கே சங்கடமாக இருக்கிறது; எனவே, வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் என்று நம்பி நீதிமன்றம் வராதீர்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சலிப்பை வெளி யிட்டுள்ளனர். மும்பையில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ‘ஹிந்து ஜன ஆக்ரோஷ் மோர்ச்சா’ என்ற நிகழ்ச்சிக்கு தடை கோரி, உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டு இருந்தது. இந்த மனுவை அவ சர விவகாரமாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதிகள் கே.எம். ஜோசப், நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பு வியாழக் கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஹிந்து ஜன ஆக்ரோஷ் மோர்ச்சா’ நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதைப் போன்ற ஒரு நிகழ்ச்சி, அண்மையில் நடத்தப்பட்ட தாகவும், சுமார் 10 ஆயிரம் போ் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் (ஆர்எஸ்எஸ் பேரணியில்) முஸ்லிம் சமூகத்தினரை பொருளா தார, சமூகரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்ற வெறுப்பைப் பரப்பும் அழைப்பு விடுக்கப்பட்ட தாகவும் முறையிடப்பட்டது. எனவே, ‘ஹிந்து ஜன ஆக்ரோஷ் மோர்ச்சா’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த விஷயத்தில், (வெறுப்பைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில்) நாங்கள் உங்களு டன் (மனுதாரர்) உள்ளோம். அதே சமயம், ஒவ்வொரு முறை நிகழ்ச்சி கள் அறிவிக்கப்படும்போதும் உச்சநீதிமன்றம் எதிர்வினையாற்ற முடியாது. ஏற்கெனவே நாங்கள் தெளிவான உத்தரவுகள் பிறப்பித்துள் ளோம். நாடு முழுவதும் பேரணி கள், கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுமாயின், நாங்கள் உத்த ரவு பிறப்பிப்பது சாத்தியமா? ஒவ்வொரு முறையும் உத்தரவு களைக் கேட்டு அணுகுவதன் மூலம் நாங்கள் (உச்ச நீதிமன்றம்) மீண்டும் மீண்டும் சங்கடத்துக்கு ஆளாக்கப்படுகிறோம். நாங்கள் ஏற்கெனவே பல உத்தரவுகள் பிறப்பித்துள்ள போதிலும், யாரும் (ஆட்சியாளர்கள்) நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, நிகழ்ச்சி கள் வாரியாக உத்தரவு (தடை) கேட்டு, உச்சநீதிமன்றத்தை கோர முடியாது. மேலும் நாடு முழுவதும் நடக்கும் எல்லா பேரணிக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றால் முடியாத காரியம். எனவே, மீண்டும் மீண்டும் இங்கு வராதீர்கள்” என்று ஆற்றாமையை வெளிப்படுத்தினர். இறுதியாக, ‘ஹிந்து ஜன ஆக்ரோஷ் மோர்ச்சா’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரும் மனுவின் நகலை மகாராஷ்டிர அரசிடம் வழங்க அறிவுறுத்திய நீதிபதிகள், இந்தமுறை மட்டும் வழக்கை வெள்ளிக்கிழமையன்று நாங்கள் விசாரிக்கிறோம் என்று சலிப்பை வெளிப்படுத்தினர். முன்னதாக, இந்திய அரசிய லமைப்புச் சட்டம் கூறும் மதச்சார் பற்ற தேசத்தை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, வெறுப்புப் பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் கடந்த 2022 அக்டோ பர் 21 அன்று தில்லி, உத்தரப்பிர தேசம் மற்றும் உத்தரகண்ட் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. பின்னர் அதற்கான நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், “இது மிகவும் தீவிரமான பிரச்சனை, இதன்மீது நடவடிக்கை எடுப்பதில் நிர்வாகத்தின் தரப்பில் ஏதேனும் தாமதம் இருந்தால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்” என்றும் எச்சரிக்கை செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.