states

img

மோடியை விமர்சிப்பது போல ஆர்எஸ்எஸ் தலைவர் மீண்டும் பாசாங்கு

மக்களவை தேர்தல் வந்து விட்டாலே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் - மோடி தலைமையி லான பாஜக அரசிற்கும் இடையே மோதல் ஏற்படுவது போன்ற பிம்பத்தை வெளிப்படுத்துவது நாடறிந்த விஷயம் தான். பிறகு தேர்தல் முடிந்த பின்பு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒன்றிரண்டு விமர்சன வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் மோடி அரசுக்கு உத்த ரவுகளை பிறப்பிக்கும். ஆர்எஸ்எஸ் உத்தரவுகளுக்கு ஏற்ப மோடி அரசும் தனது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும். இது கடந்த 10 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வுதான். இந்நிலையில், 18ஆவது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து மோடி - ஆர்எஸ்எஸ் இடையே பிரச்சனை இருப்பதாக தக வல் வெளியாகின. மக்களவை தேர்தல் முடிந்தவுடன் கூட்டணிக் கட்சிகளின் தயவோடு மூன்றாவது முறையாக மோடி பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். வழக்கம் போல மோடியை விமர்சிப்பது போன்ற பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மோகன் பகவத் கூறுகையில், ”தேர்தலின் போது போட்டி தவிர்க்க முடி யாதது தான். ஆனால் தேர்தல் என்பது  போட்டிதானே தவிர போர் அல்ல. எதிர்க் கட்சிகளை எதிரியாகப் பார்க்கக் கூடாது. அவர்களின் கருத்தும் வெளிச் சத்துக்கு வரவேண்டும். உண்மையான சேவகர் கண்ணியத்தை கடைப்பிடிப் பாரே தவிர, ஆணவத்தை காட்டி மற்ற வர்களை காயப்படுத்த மாட்டார். தேர்தல் வாய்ச் சவடால்களை விட்டு விட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்சனை களில் கவனம் செலுத்த வேண்டிய அவ சியம் உள்ளது. முக்கியமாக மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” எனக் கூறினார்.