புதுதில்லி, மார்ச் 26- பெட்ரோல், டீசல் விலை கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறை யாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக இந்த ஐந்து நாட்களில் லிட்டருக்கு ரூ.3.20 வரை விலை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நவ.4-ஆம் தேதிக்குப் பிறகு 137 நாட்களாக விலை உயர்த்தப் படவில்லை. இந்த நிலையில் மார்ச் 22- ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து நான்கா வது முறையாக சனிக்கிழமை (மார்ச் 26) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறை யாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந் துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். பெட்ரோலின் விலை 84 காசுகள் அதிகரித்து ரூ.113.35 ஆகவும், டீசல் விலை 85 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.97.55 ஆகவும் விற்கப்படுகிறது. கிரிசில் எனப்படும் முதலீடுகள் தொடர்பான பகுப்பாய்வு நிறுவனம் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.10 வரை அதிகரிக்கலாம் எனக் கணித்துள்ளது. தற்போது சர்வ தேசச் சந்தையில் பிரன்ட் கச்சா எண் ணெய்யின் விலை பீப்பாய்க்கு 110 முதல் 120 டாலர் வரை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை அதி கரிக்கும் என்றும் கணித்துள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவை யில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி கொள்கிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தி யப் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.