புதுதில்லி, நவ.29- இந்தியா உள்ளிட்ட ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளில், நடப்பாண்டைக் காட்டிலும் 2023-ஆம் ஆண்டில் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என ஆசிய பசிபிக் பிராந்திய ‘மூடிஸ்’ அமைப்பின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் காக்ரேன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பாதிப்பு, ஐரோப்பா மற்றும் அமெ ரிக்காவில் நிலவி வரும் மந்த நிலை குறித்தான அச்சம், சீனாவின் மந்த நிலை ஆகியவற்றால், ஆசிய - பசிபிக் பிராந்தி யத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகலாம் என்று அவர் கூறியுள்ளார். உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021-22 நிதி யாண்டில் 6 சதவிகிதமாக இருந்தது. இது நடப்பு 2022-23 நிதியாண்டில் 3.2 சதவிகிதமாகவும், 2023-24 நிதியாண்டில் இன்னும் குறைந்து, 2.7 சதவிகிதமாகவும் குறையலாம் என ஐஎம்எப் கூறியிருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை, உலகளாவிய மந்த நிலை அந்தளவிற்கு மோசமாக இருக்காது என்றாலும், வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்றும் ஐஎம்எப் தெரிவித்திருந்தது. இதனிடையே, உலக நாடுகள் மந்த நிலையை எதிர் கொள்ளலாம் என தற்போது எச்சரிக்கை விடுத்துள்ள ‘மூடிஸ்’ அமைப்பும், உலகளாவிய மந்த நிலை எதிரொலியாக இந்தியா மெதுவான வளர்ச்சியினையே காணலாம்; வளர்ச்சி யில் தாக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. “இந்தியாவில் முதலீடானது அதிகரித்துள்ளது. உற் பத்தித் திறன் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெக்னாலஜி மற்றும் விவசாய துறையானது மேம்பட்டுள்ளது. எனினும் தற்போது பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்படும் நிலையில், வளர்ச்சி பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. தொடர்ந்து பணவீக்கம் என்பது 6 சதவிகிதத்திற்கும் மேலாக காணப்படுகின்றது. இது வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 2022-ஆம் ஆண்டில் இந்தியா 8 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது 2023-ஆம் ஆண்டில் 5 சதவிகித மாக குறையலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.