பனாஜி, டிச.16- பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை மிரட்டி பாலியல் வல்லு றவுக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு பின்னணியில், கோவா-வைச் சேர்ந்த பாஜக அமைச்சர் மிலிந்த் நாயக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் மிலிந்த் நாயக். வயது 58. இவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவரை, மிரட்டி பாலி யல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக வும், இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்த நிலையில், கருவையும் மிரட்டி கலைக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக் கப்பட்ட பெண், காங்கிரஸ் தலைவர் கள் சங்கல்ப் அமோன்கர் உள்ளிட் டோரை அணுகி விவரங்களை அளித் துள்ளார். மிலிந்த் நாயக்கால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண்ணை சமாதானப்படுத்திய அமைச்சர் மிலிந்த் நாயக், சங்கல்ப் அமோன்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீதே மிரட்டிப் பணம் பறித்தல், பாலியல் துன்புறுத்தலில் ஈடு பட்டதாக புகார் அளிக்க வைத்துள் ளார்.
அமோன்கர், 2017 சட்டமன்றத் தேர் தலில் காங்கிரஸ் சார்பில் மோர் முகாவ் தொகுதியில் மிலிந்த் நாயக்கை எதிர்த்துப் போட்டியிட்டு, 140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பீகார் போலீசாரும் பெண்ணின் புகார் அடிப்படையில் காங்கிரஸ் தலை வர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பின்னர் அந்த வழக்கை கோவா காவல்துறைக்கு மாற்றியுள்ளனர். அமைச்சர் மிலிந்த் நாயக் தங்க ளையும் மிரட்டப் பார்க்கிறார் என்று புரிந்து கொண்ட சங்கல்ப் அமோன்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள், நாயக்கிற்கு எதிராக பனாஜியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, அமைச் சர் மிலிந்த் நாயக் - பீகார் பெண்ணுக்கு இடையிலான செல்போன் பதிவுகள், வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மற் றும் அமைச்சர் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் கருக் கலைப்பு செய்ய வற்புறுத்தியதற் கான வீடியோ ஆதாரங்களை சமர்ப் பித்தனர்.
அமைச்சரின் மிரட்டல் கார ணமாகவே பீகார் பெண், தங்கள் மீது புகார் அளித்திருப்பதாகவும் உண்மை யைப் போட்டு உடைத்தனர். முன்னதாக, “முதல்வர் சாவந்த் தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அமைச்சர், பீகாரைச் சேர்ந்த பெண்ணிடம் தனது அலுவலகத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த அமைச்சருக்கு எதிராக நட வடிக்கை எடுக்க பாஜக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறோம். பதினைந்து நாட்களின் முடிவில், அரசாங்கம் அமைச்சரை அமைச்சர வையில் இருந்து நீக்கவில்லை என் றால், அவர் பெயரைச் சொல்ல வேண் டிய கட்டாயம் ஏற்படும்” என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அதிரடிகளை எதிர்பார்க் காத கோவா பாஜக அமைச்சர் மிலிந்த் நாயக், தானாகவே முன்வந்து அமைச் சர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பிரமோத் சாவந்த்-தும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். “சுதந்திர மான மற்றும் நியாயமான விசா ரணைக்காக மிலிந்த் நாயக் ராஜி னாமா செய்துள்ளார், நான் அதை ஏற்றுக்கொண்டேன். காங்கிரஸ் தரப்பில் என்ன ஆதாரம் இருந்தாலும் விசாரணை நடத்தப்படும்” என்று சமா ளித்துள்ளார்.