போபால், ஜன.3- ம.பி. பாஜக அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இல்லம் முன்பு போராட் டம் நடத்திய இதர பிற்பட்டோர் பிரிவு தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தில் பஞ்சா யத்து அமைப்பு தேர்தலில் இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரு கிறது. மக்கள் தொகையில் 50 சத விகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் தங்களுக்கு பஞ்சாயத்து அமைப்பு களில் உரிய பிரதிநிதித்துவம் வழங் கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், போபா லில் முதல்வர் சிவராஜ் சவுகான் இல் லத்தை முற்றுகையிட்டும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு திரண்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய் துள்ளனர். இந்த முற்றுகையில் பங்கேற்பதற் காக, ‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திர சேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் வந்த நிலையில், அவர்களை போபால் விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.