புதுதில்லி,ஜன.15- விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை உள்ளடக்கி ஜனவரி 23 ஆம் தேதி முதலே குடியரசு தின கொண்டாட்டங்களை துவங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950- ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தில் தில்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடியேற்றி முப்படை களின் அணிவகுப்பை பார்வையிடுவார். ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டா டப்படும் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24 ஆம் தேதியே தொடங்கிவிடும். இந்த ஆண்டு முதல் இதில் மாற்றத்தை ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ளது. அதாவது குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் இணைத்துள்ளது. இதன்படி ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.