புதுதில்லி, ஏப்.1- “2024 மக்களைப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வகுப்பு வாத வன்முறைகளைக் கையிலெடுக்கத் தொடங்கி விட்டது. மேற்கு வங்கம், குஜ ராத்தில் நடந்தவை அதற்கான முன்னோட் டம்தான்” என்று ஒன்றிய முன்னாள் அமைச் சரும், மூத்த வழக்கறிருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக, விஎச்பி போன்ற ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள், இஸ்லாமியர்க்கு எதிரான கலவரங்களை அரங்கேற்றுவதற்கான கருவிகளாக ராமநவமி, அனுமன் ஜெயந்தி யை மாற்றியுள்ளன. அதன்படியே இந் தாண்டும் மார்ச் 30 அன்று பாஜக ஆளும் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் மேற்குவங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டங்கள் இஸ்லாமியர்க்கு எதி ரான வன்முறை வெறியாட்டங்களில் முடிந்திருக்கின்றன. இதுதொடர்பாக, கபில் சிபல் டுவிட்ட ரில் விமர்சனம் வைத்துள்ளார். அதில், “2024-ஐ நெருங்கிக் கொண்டி ருக்கிறோம். பாஜக-வினருடைய மேஜை யில் 1. வகுப்புவாத வன்முறை, 2. வெறுப்பு பேச்சுக்கள், 3. சிறுபான்மையினரைத் தூண்டிவிடுதல், 4. அமலக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகளை குறிவைத்தல் போன் றவை தயாராக இருக்கின்றன. மேற்கு வங்கம் பற்றி எரிவதும், கர்நாடகா, குஜ ராத்தில் கலவரம் புகைவிடத் தொடங்கி இருப்பதும் அதற்கான முன்னோட்டமே” என்று தெரிவித்துள்ளார்.