புதுதில்லி, மே 15- இந்திய தலைமை தேர்தல் ஆணைய ரான சுஷில் சந்திராவின் பதவிக் காலம் சனிக்கிழமையன்று முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்தியா வின் 25-வது தலைமை தேர்தல் ஆணைய ராக ராஜீவ் குமார் ஞாயிறன்று பொறுப் பேற்றுக் கொண்டார். இவரது தலைமை யின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.