states

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

புதுதில்லி,மார்ச் 11- தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசா ரிக்க வேண்டும் என்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.  அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த வழக்கில் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.  இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று  ராஜேந்திர பாலாஜி சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை  உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, நிராகரித்துள்ளது.