states

தில்லியில் சூறைக்காற்றுடன் மழை: விமான சேவை பாதிப்பு

புதுதில்லி, மே 23-  தலைநகர் தில்லியில் பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருவ தால் விமான சேவை பாதிக்கப் பட்டுள்ளது.  இந்திய வானிலை ஆய்வு  மையம் தகவல்படி, 60 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில், சூறைக் காற்றுடன் சாரல் மழை திங்க ளன்று அதிகாலை முதல் பெய்ய தொடங்கியது.  இதனால், தில்லி விமான  நிலையத்தில் புறப்பட வேண்டிய 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் காலதாமத மாக புறப்படும் என விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், தில்லி விமான  நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 18 விமானங்களின் வருகை தாமதமாகி உள்ள தாகவும், 2 விமானங்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் விமானநி லைய அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த மோசமான வானி லை காரணமாக தில்லி விமானநிலையத்தில் தரை யிறங்க வேண்டிய பல்வேறு  விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநிலங் களில் உள்ள விமான நிலை யங்களுக்கு திருப்பி விடப் பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.