states

விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமாக இருப்பது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுதில்லி, அக்.11-  நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி மற்றும்  விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் பிர தமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌன மாக இருப்பது ஏன் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி யுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் அதிகரிக்கும் பண வீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை போன்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாக விமர்சித்துள்ளார். இதேபோன்று கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவக் கட்ட மைப்பை செய்திருப்பதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவனே கூறியதை மேற்கோள்காட்டி வெளியிட்ட மற்றொரு பதிவில்,  இந்திய மண்ணில் சீனர்கள் தங்க போகிறார்களா? என்றும் வினவியுள்ளார்.